districts

கோவில்களை தனி வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்கிறார் மதுரை ஆதீனம்

மதுரை, ஜூன் 4- ஆதீனம் என்றால் பதுங்கிக் கிடக்க முடி யாது. ஜால்ரா அடிக்க முடியாது என மதுரை யில் சனிக்கிழமை தொடங்கிய (சாமி யார்கள்) துறவியர் மாநாட்டில், மதுரை ஆதீனம்  கூறியுள்ளார். விஸ்வ இந்து பரி ஷத்தின் (ஆர்எஸ்எஸ்) ஒரு பிரிவான, அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை சார்பில், மதுரை பரவையில் இரண்டு நாள்  துறவியர் மாநாடு சனிக்கிழமை தொடங்கு கியது. மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் சுதா கர் தொடக்க உரையாற்றினார். விஎச்பி அகில உலக இணைப் பொதுச்செயலர் தாணுமலையான் தலைமை உரையாற்றி னார். இந்த மாநாட்டில் மதுரை ஆதீனம் பேசியதாவது:  கோவிலை தனித்து இயங்கும் வாரி யத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனப் போராட்டம் நடத்தினோம். கோவில் சொத்து களுக்கு குத்தகை, வாடகை பணம் முறை யாக வருவதில்லை. இதைப்பற்றிக் கேட்  டால், பேசினால் இடையூறு செய்கிறீர்களா எனக் கேட்கின்றனர். ஆதீனம் என்றால், பதுங்கிக் கிடக்க முடியாது. ஜால்ரா அடிக்க முடியாது என்றார். பேரூர் ஆதீனம் மருதாசல அடிகள் பேசும்போது, சமுதாய நல்லிணக்கம் ஏற்படுத்துவதுடன், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும். தனித்து இயங்கும் வாரியத்தின் கீழ் கோவிலைக் கொண்டு வர வேண்டும் என்றார். மாநாட்டில் வி.எச்.பி.,  அகில உலக பொதுச்செயலர் மிலிந்த் பராண்டே, அயோத்தி ராமர் கோவில் கட்டு மானக் குழுப் பொருளாளர் கோவிந்தகிரி மகராஜ், டிரஸ்ட் உறுப்பினர் உடுப்பி விஸ்வ பிரசன்ன தீர்த்தா உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.