கடமலைக்குண்டு, ஜன.17- தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்ப ளவில் இலவம் மரங்கள் உள்ளன. இலவம் மரங்களில் இருந்து கிடைக்கும் பஞ்சு, தலை யணை, மெத்தை தயாரிப்பிற்கு முக்கிய பங்காற்றி வருகிறது. வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் இலவம் பஞ்சு சீசன் தொடங்க உள்ளது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இலவம் பிஞ்சுவிற்கு மவுசு அதிகரித்து வருகிறது. பொதுவாக இலவம் பிஞ்சுகள் வாசனை மற்றும் மருந்து பொருட்கள் தயா ரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெளிமாநிலங்களில் டீ தூளில் கலப்படம் செய்யப்படுவதற்காக இலவம்பஞ்சு பவு டர் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படு கிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்க ளாக இலவம் பிஞ்சு விலை தொடர்ந்து அதி கரித்து வருகிறது. தற்போது 1 கிலோ இலவம் பிஞ்சு 150 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் சாலையோர தனியார் தோட்டங்களில் வளர்க்கப்பட்டு வரும் இலவம் மரங்களில் இருந்து உதிர்ந்து விழும் பிஞ்சுகளை சேகரிக்கும் பணிகளில் ஏராளமான பொது மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகை யில், இலவசம் பிஞ்சு சீசன் ஜனவரியில் துவங்கி மார்ச் வரை நீடிக்கும். தற்போது நன்கு காய வைத்த இலவசம் பிஞ்சு கிலோ ரூ180வரை விற்பனையாகிறது. சிறிய காய்கள் முதல் தரமாகவும், சற்று பெரிய காய்கள் இரண்டாம் தரமாகவும் வெவ்வேறு விலைகளில் விற்பனையாகிறது. தற் போது ஊரடங்கு காரணமாக வேலை வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் ஏழை எளிய பொதுமக்களுக்கு இலவம் பிஞ்சு சேகரிப்பு முக்கிய வருவாயாக மாறி யுள்ளது என பொதுமக்கள் தெரிவித்தனர்.