தேனி/மதுரை, ஜன.7- தமிழ்நாட்டின் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவ சாயத்திற்கும், குடிநீர்த் தேவை களுக்கும் உதவும் முல்லைப் பெரி யாறு அணையைக் கட்டிய ஆங்கி லேயப் பொறியாளர் ஜான் பென்னி குவிக் 182-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது நினைவை போற் றும் வகையில் அன்னாரது படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் அமைந்துள்ள அவரது மணி மண்ட பத்தில் தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்து கொண்டு பென்னி குவிக் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஆட்சியர் முரளீதரன், சட்டமன்ற உறுப்பினர்கள் கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி ஆ.மகாராஜன், பெரியகுளம் கே.எஸ்.சரவணகுமார் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் பென்னி குவிக் படத்திற்கு மலர் தூவி மரி யாதை செலுத்தினர். இதையடுத்து செய்தியாளர் களுக்குப் பேட்டியளித்த அமைச்சர், முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்து வதற்கு மு.க.ஸ்டாலின் தலைமை யிலான தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும். மேலும் முல்லைப் பெரி யாறு அணை விவகாரத்தில் தமிழகத்து டன் நட்புடன் இருக்கும் கேரள அரசு டன் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காணப்படும் என்றார்.
அதிமுகச் சார்பில் முன்னாள் முத லமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேனி மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை,தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கே.ராஜப்பன், மாவட்டச் செயலாளர் டி.கண்ணன், பி.ஜெய ராஜ், மாவட்டப் பொருளாளர் மணிகண் டன், ஏரியா செயலாளர் கே.கர்ணன், விதொச ஏரியாச் செயலாளர் ஜி.பி .முரு கன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஏரியாச் செயலாளர் பி.ஜெயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தேனி மாவட்டம் போடி ஊராட்சி ஒன்றியம் பாலார் பட்டி பேருந்து நிலையத்திலிருந்து பொன்னிகுக்கின் உருவப்படத்துடன் தேவராட்டம் ஆடிக் கொண்டு அலங்க ரிக்கப்பட்ட காளைகளுடன் ஊர்வல மாகச் சென்ற கிராமமக்கள் பென்னி குக்கின் நினைவு கலையரங்கத்திற்கு சென்று பொங்கல் வைத்து வழிபட்ட னர். மதுரை மதுரையில் உள்ள பென்னிகுவிக் சிலைக்குத் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டத் தலைவர் கே.அலாவுதீன், துணை மேயர் டி.நாக ராஜன், பல்சமய உரையாடல் குழு செய லர் அருட்தந்தை பெனடிக்ட் பர்ண பாஸ், மாமன்ற உறுப்பினர்கள் டி.குமர வேல், வி.முருகன், என்.கணேச மூர்த்தி, எம்.ஜான்சன், எஸ்.எம்.லூர்து, பி.ரசூல், ஜெ.எகியா, போனி பாஸ் ஆகி யோர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.