அருப்புக்கோட்டை, அக்.31- தமிழக அரசு, ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை யை உடனடியாக துவங்க வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அனைத்து பேருந்து களையும் இயக்கிடத் தேவை யான ஊழியர்களை நிய மிக்க வேண்டும் என்று வலி யுறுத்தி சிஐடியு அரசுப் போக்குவரத்து தொழிலா ளர் சங்கம் மற்றும் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார் பில் அருப்புக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. அருப்புக்கோட்டை பணி மனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஜி. திருப் பதி தலைமை வகித்தார். துவக்கி வைத்து எஸ்.தமிழ்செல்வராஜ் பேசினார். சிபிஎம் நகர் செயலாளர் எஸ்.காத்தமுத்து ஆத ரித்துப் பேசினார். இதில், நல அமைப்பின் எம். ராஜேந் திரன், எஸ். முருகேசன் ஆகி யோர் உட்பட பலர் பங்கேற்ற னர்.