districts

img

வீரபாண்டியில் பேரூராட்சி அகற்றிய இடத்தில் மீண்டும் கடை சிஐடியு சாலையோர வியாபாரிகள் நடத்திய போராட்டம் வெற்றி

தேனி, ஏப்.7- வீரபாண்டியில் நெடுஞ் சாலைத்துறைக்கு சொந்தமான  இடத்தில் உள்ள கடைகளை பேரூ ராட்சி நிர்வாகம் முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் அகற்றிய சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரி வித்து சிஐடியு சார்பில் வீர பாண்டி பேரூராட்சி அலுவலகத் தில் நடத்திய காத்திருப்புப் போராட்டத்தின் எதிரொலியாக மீண்டும் கடைகளை வைத்துக் கொள்ள அனுமதி வழங்கியது. தேனி அருகே உள்ள வீர பாண்டி கௌமாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தலமா கும். நெடுஞ்சாலையில் இருந்த 50 கடைகள் பேரூராட்சி நிர்வா கத்தால் அகற்றப்பட்டன.‌ இந் நிலையில் சாலையோர கடை களை முன் அறிவிப்பு ஏதும் இன்றி அகற்றியதை கண்டித்து வியா ழனன்று சிஐடியு தலைமையில் பாதிக்கப்பட்டோர் வீரபாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சிஐடியு நிர்வாகி டி.ஜெயபாண்டி தலைமை வகித்தார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.வெங்கடேசன், சி.முனீஸ்வரன், இ.தர்மர், சிஐ டியு மாவட்டத் தலைவர் சி.முரு கன் உள்ளிட்ட நிர்வாகிகள் போரா ட்டத்தை ஆதரித்து பேசினர்.  பின்னர் பேரூராட்சி தலை வர், செயல் அலுவலருடன் சிஐ டியு அமைப்பினர் பேச்சு வார்த்தை நடத்தினர்.‌ பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப் படாததால் மாவட்ட ஆட்சியரை சந்தித்து சிஐடியு தலைவர்கள் முறையிட்டு, சாலையோர வியா பாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உதவுமாறு கேட்டுக் கொண்டனர்.  அதன் பின்னர் பேரூராட்சி தலைவர் கீதா சசி, செயல் அலு வலரிடம் சிஐடியு அமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.‌ பேச்சுவார்த்தையில் இரண்டு தினங்களுக்கு பிறகு மீண்டும் அதே இடத்தில் கடை வைத்துக் கொள்ள அனுமதி அளித்ததாக  சங்க நிர்வாகி ஜெயபாண்டி தெரி வித்தார். போராட்டத்தில் அல்லி உத யன் பொன்னுத்துரை, காமுத் துரை, அய்யங்காளை, வீரமணி, கோபால் உள்ளிட்ட பாதிக்கப் பட்ட சாலையோர வியாபாரிகள் கலந்து கொண்டனர்.