திருவில்லிபுத்தூர், ஆக.9- விருதுநகர் மாவட்டம் வத்திரா யிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான பட்டுபூச்சி ஜெயந்தி நகர் , அத்திக் கோயில், தாணிப்பாறை ராம்நகர், நெடுங்குளம் வள்ளியம்மாள் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்க ணக்கான மலைவாழ் குடும்பங் கள் வசித்து வருகின்றனர். இந்த மலைவாழ் மக்கள் மலைக்குச் சென்று தேன் எடுத்து அவற்றை விற்பனை செய்து தங் களின் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். தாணிப்பாறை ராம்நகர் மலை வாழ் குடியிருப்பு பகுதியில் 80 மலைவாழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த மலைவாழ் மக்கள் மலைக்கு சென்று 11 பொருட்களை எடுத்து விற்பனை செய்ய வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. வனத்துறையா னது மலைக்கு செல்ல பல்வேறு கெடுபிடிகளை காட்டுவதாக மலைவாழ் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக தங்களுக்கு அனு மதி வழங்கப்பட்ட பொருட்க ளையே எடுப்பதற்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்துவதாகவும் மலைப்பகுதியில் மாடுகளை மேய்ப்பதற்கும் வனத்துறை அனுமதிப்பதில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். தாணிப்பாறை சதுரகிரி கோவி லுக்கு பக்தர்கள் செல்லக்கூடிய விசேஷ நாட்களில் கோயிலுக்கு செல்லும் வழியில் கடை வைப்ப தற்கு கூட அனுமதி தராமல் வனத் துறை பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி தங்கள் வாழ்வாதா ரத்தை கேள்விக்குறியாகி உள் ளது என்று மலைவாழ் மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்ற னர். மயானத்திற்கு செல்வதற்கு சாலை அமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் இன்னும் நிறைவேற்றி தரவில்லை. இது குறித்து பல முறை அதிகாரிகளி டம் தகவல் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை எனக் கூறி புதனன்று நூற்றுக்கும் மேற்பட்ட மலை வாழ் மக்கள் மலைப்பகுதியில் குடியேற தங்களது பகுதியில் இருந்து வெளியேறி சென்றனர். அதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.உடனே தங்க ளது கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும் எனவும், வனத்துறையினர் கெடு பிடிகள் காட்டுவதை தவிர்க்க வேண்டும் என்பது மலைவாழ் மக்களின் கோரிக்கையாக உள் ளது.