திருவில்லிபுத்தூர், மார்ச் 24- திருவில்லிபுத்தூரில் வடக்கு ரத வீதி யில் உள்ள நகர கூட்டுறவு கடன் சங்கம் கிளை வங்கி அலுவலகத்தில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படாத நிலையில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகை யிட்டனர். வங்கியில் 500 நபர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என விண் ணப்பங்கள் வாங்கி கொண்டு அதற்கு வட்டி கட்ட வேண்டாம் என அதிகாரிகள் கூறியதாகவும் தற்போது 140 நபர்களுக்கு மட்டும் நகை கடன் தள்ளுபடி செய்யப் பட்டது. மீதமுள்ள 360-க்கும் மேற்பட்ட வர்களுக்கு நகை கடன் தள்ளுபடி கிடை யாது எனவும் வட்டி கட்ட வேண்டும் இல் லையென்றால் நகைகள் ஏலம் விடப்படும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்ததாக வும் பெண்கள் கூறுகின்றனர்.