விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வந்த காவலர் பலி
விருதுநகர், அக்.16- விருதுநகர் அருகே நடந்த சாலை விபத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளர் பலியான நிலையில், படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காவலரும் உயிரிழந்தார். விருதுநகர் அருகே உள்ள சூலக்கரை காவல் நிலை யத்தைச் சேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் புஷ்பராஜ். ஆமத்தூர் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலர் கார்த்திகேயன். இருவரும் அக்டோபர் 11 அன்று இரவு, ஒரே இரு சக்கர வாகனத்தில் விசாரணைக்காக சென்று கொண்டிருந்தனர். சாத்தூர்- விருதுநகர் சாலையில் கணபதி மில் அருகே உள்ள சேவைச் சாலையில் சென்ற போது, சாலையோரம் பழுதாகி நின்ற லாரி மீது இரு சக்கர வாக னம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் பலத்த காயமடைந்து, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட னர். இதில் புஷ்பராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவலர் கார்த்திகேயன் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கார்த்திகேயன் திங்களன்று அதி காலை உயிரிழந்தார்.
சாலையில் சென்ற இரு சக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது
சிவகாசி, அக்.16- சிவகாசி, சத்யா நகரைச் சேர்ந்தவர் சரவணபிரபு. தனியார் நிறுவன ஊழியரான இவர், தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது வாக னத்தில் இருந்து புகை வந்துள்ளது. இதனால் உடனடி யாக வாகனத்தை நிறுத்தி விட்டு சரவணபிரபு கீழே இறங்கியுள்ளார். சிறிது நேரத்தில், வாகனத்தில் தீ பற்றி மள மள வென எரியத் தொடங்கியது. அக்கம் பக்கத்தினர், இது குறித்து சிவகாசி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதில் வாகனம் முழுவதும் எரிந்து போனது. இதுகுறித்து, சிவகாசி கிழக்கு காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வியாபாரியிடம் வெள்ளிப் பொருட்களை திருடியவர் கைது
சிவகாசி, அக்.16- கோவை மாவட்டம் சொக்காம்புத்தூரைச் சேர்ந்த வெள்ளி பொருட்கள் வியாபாரி முத்துகிருஷ்ணன் (61). இவர் சிவகாசிக்கு, கொலுசு, மோதிரம், மெட்டி உள்ளிட்ட வெள்ளி பொருட்களுடன் காரில் வந்துள்ளார். காரை ஒப்பந்த ஓட்டுநர் சாமுவேல் ஓட்டியுள்ளார். அப்போது காரில் விற்பனைக்காக வைத்திருந்த வெள்ளிப் பொருட்கள் காணாமல் போயுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த முத்துகிருஷ்ணன், இதுகுறித்து, சிவ காசி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், வழக்குப் பதிவு செய்த காவல்துறை யினர் சம்பவ இடத்திற்கு நேரில் விசாரணை நடத்தினர். பின்னர், அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது காரில் இருந்த வெள்ளிப் பொருட்களை ஒப்பந்த ஓட்டுநராக வந்த சாமு வேல் திருடி, தனது மகனிடம் கொடுத்தனுப்பியது தெரிய வந்தது. இதையடுத்து ஓட்டுநர் சாமுவேலை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த 8 கிலோ வெள்ளி பொருட்களை மீட்டனர்.
விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் இழப்பீட்டு தொகை வழங்க கோரி விசிக ஆர்ப்பாட்டம்
விருதுநகர், அக்.16- அனைத்து விவசாயிகளுக்கும் இன்சூரன்ஸ் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். மாற்றுத் திற னாளிகள் அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும். குரண்டி கிராமத்தில் சாதி இந்துக்கள் ஆக்கிரமித்த நிலங்களை மீட்டு தலித் மக்களிடம் வழங்க வேண்டும். அருப்புக்கோட்டை அம்பேத்கர் காலனியில் அடிப்படை வசதி செய்து தர வேண்டும். ஸ்ரீரெங்காபுரம் தரைப் பாலத்தை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தை கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர்கள் இனியவன், சந்திரன், செல்வின் ஏசுதாஸ், பிரியதர்சினி ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மதுரை மண்டல மாவட்டங்களில் ரேஷன் அரிசி கடத்திய 448 பேர் கைது
மதுரை, அக்.16- குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவின் மதுரை மண்டலத்துக்குட்பட்ட மாவட்டங்களில் ரேஷன் அரிசி கடத்திய 448 பேர் கைது செய்யப்பட்ட 721 டன் ரேஷன் அரிசி மற்றும் 442 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மதுரை மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புல னாய்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘மதுரை மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறைக்கு உட்பட்ட மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், உத்தம பாளையம், விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்புப்பிரிவு காவல்துறையினர் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அத்துடன் கேரளா மாநில எல்லைகளிலும் தீவிர ரோந்துப் பணியும் நடைபெற்று வருகிறது. இதனால், 2023 அக்டோபர் மாதம் வரை, மதுரை மண்டலத்தில் மட்டும் 1,353 வழக்கு கள் பதிவு செய்யப்பட்டு 448 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 1,144 வழக்கு கள் பதிவு செய்யப்பட்டு 721 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 140 இரு சக்கர வாகனங்கள், 34 மூன்று சக்கர வாகனங்கள், 278 நான்கு சக்கர வாக னங்கள் என மொத்தம் 442 வாகனங்கள் பறி முதல் செய்யப்பட்டுள்ளன. இவை தவிர அரசு மானியத்தில் வழங்கப்பட்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயுவை முறை கேடாக பயன்படுத்தியதாக 169 வழக்கு கள் பதிவு செய்யப்பட்டு, 237 எரிவாயு உருளைகள் பறிமுதல் செய்யப்பட்டுள் ளன. பெட்ரோல், டீசல் பதுக்கல், கடத்தல் தொடர்பாக 6 வழக்குகள் பதிவு செய்யப் பட்டு, 22,150 லிட்டர் கலப்பட ஆயில் பறி முதல் செய்யப்பட்டுள்ளது. ரேஷன் பருப்பு கடத்தல் தொடர்பாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4,623 கிலோ பருப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரளத்துக்கு ரேஷன் அரிசி தொடர்ந்து கடத்திய 5 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கீழமை நீதி மன்றங்களில் விசாரணையில் உள்ள வழக்குகளில் 236 வழக்குகள் முடிக்கப் பட்டு, தண்டனை பெற்றுக் கொடுக்கப் பட்டு இருக்கிறது. நிலுவையில் உள்ள வழக்குகளில் ஆஜராகாத 15 பேருக்கு பிடிவாரண்டு பெறப்பட்டு நிறைவேற்றப் பட்டு உள்ளது. உணவுப்பொருள் கடத்தல் தொடர்பாக, தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் 130 நபர்களில் 58 நபர்களுக்கு வரு வாய் கோட்டாட்சியர் அவர்களிடம் நன்ன டத்தை பிணையம் பெறப்பட்டு நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மதுரை மண்டலத்துக்குட்பட்ட தமிழக-கேரள எல்லைகளான போடி மெட்டு, கம்பம் மேட்டு, குமுளி, புளி யரை, களியக்காவிளை, கோலிவிளை, நெட்டா சோலை, பளுகல், மெக்கோடு, காக்காவிளை, நீரடி காலனி, செரிகோலா ஆகிய சோதனைச்சாவடிகளில் இரவு பகலாக வாகனத் தணிக்கை நடத்தி வழக்கு கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இரு மாநிலங்களுக்கிடையே சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டு ரேஷன் அரிசி கடத்தலை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டு வருகிறது’’ என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.