மதுரை, ஜூன் 22- மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி யில் உள்ள அரசுப் பள்ளி சுமார் 60 ஆண்டுகளுக்கு முந்தையது. இங்கு சுமார் 350 ஏக்கரில் பறவைகள் சரணா லயம் அமைய உள்ளது. அதற்கான பணிகள் கடந்த சில நாட்களாக நடை பெற்று வருகிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊரில் உள்ள 60 ஆண்டுகளாக பள்ளிக் உள்ள கட்டடம் இன்றும் பெயர் சொல்கிறது. இங்கு பத்தாண்டுகளுக்கு முன்பு கட் டப்பட்ட கட்டடம் மிகவும் ஆபத்தான நிலையில் “ தமிழகத்தின் கட்டடக் கலைக்கு” சான்றாய் நிற்கிறது. இந்தக் கட்டடத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் கல்வி கற்பித்து வரு கின்றனர். இந்தப் பள்ளியில் சத்துணவு மையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. ஒரு ஆள் உயரத் திற்கு குழிகள் தோண்டப்பட்டு 45 நாட் கள் ஆகிவிட்டது. பணி தொடங்கு வதற்கான அறிகுறியையே காண வில்லை. பச்சிளம் குழந்தைகள் குழி கள் பக்கம் சென்றுவிடக்கூடாது என் பதை கண்காணிப்பதே ஆசிரியர் களுக்கு வேலையாகிவிட்டது. ஆசிரி யர்கள் பாடம் சொல்லிக்கொடுப்பார் களா? குழந்தைகளின் உயிரைப் பாது காப்பார்களா? ஆட்சியர் அனீஷ்சேகர் இந்தப் பள்ளியை பார்வையிட்டு நட வடிக்கை எடுக்க வேண்டும்.