districts

மதுரை முக்கிய செய்திகள்

வேலிச் செடிக்குள் சங்கிலி  வெடி தயாரித்தவர் கைது

வெம்பக்கோட்டை, செப்.8- விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே வேலிச் செடிக்குள் சங்கிலி வெடிகளை தயார் செய்த வரை போலீசார் கைது செய்தனர். ஏழாயிரம்பண்ணை காவல்நிலைய போலீசார் சார்பு  ஆய்வாளர் இராமமூர்த்தி தலைமையில் ரோந்து சென்ற னர். மஞ்சள் ஓடை கிராமத்தில் உள்ள வேலிச் செடிக்குள்  அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (33) என்பவர் சங்கிலி வெடிகளை தயாரிப்பது தெரியவந்தது. இதையடுத்து, பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீ சார் ராஜ்குமாரையும் கைது செய்தனர்.

அரசுப் பேருந்து மோதி  முதியவர் பலி

சாத்தூர், செப்.8- சாத்தூர் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டி ருந்தவர் மீது அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாத்தூர் - நென்மேனி சாலையில் உள்ளது செல்லையா ராமன் கோவில் தெரு. இப்பகுதியைச் சேர்ந்தவர் பிச்சை (84). இவர் சாத்தூர் பேருந்து நிலையத்தின் வெளியே நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது, அவ்வழியே வந்த அரசுப் பேருந்து பிச்சை மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் லூர்துராஜ் சாத்தூர் நகர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், அரசுப்பேருந்து  ஓட்டுநரான முத்துக்குமார்(44) மீது போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விலை உயர்வை கண்டித்து  சிபிஐ ஆர்ப்பாட்டம் 

இராஜபாளையம், செப்.8- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சேத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மோடி அரசின் விலை உயர்வை கண்டித்தும், புதிய ரேசன் கார்டு  மற்றும் அனைத்து ரேசன் பொருட்களும் வழங்கிட வலியு றுத்தியும் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் பொ.லிங்கம்  கண்டன உரையாற்றினார்.  ஒன்றியச் செயலாளர் கணேச மூர்த்தி தலைமையும், ராஜா, ராஜகுரு ஆகியோர் முன்னி லையும் வகித்தனர். விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் வரதராஜன், ஒன்றிய கவுன்சிலர் வழக்கறிஞர் பகத்சிங், அய்யணன், ஜெயராம், மாயாண்டி, அமுல்ராஜ் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தகர செட்டில் ராக்கெட் வெடி தயாரித்தவர் கைது

சிவகாசி, செப்.8- சிவகாசி அருகே தகர செட்டில் ராக்கெட் வெடி களைத் தயாரித்தவரை போலீசார் கைது செய்தனர். சிவகாசி அருகே உள்ளது கட்டளைப்பட்டி சாலை. இங்கு மாரனேரி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது,  அங்குள்ள தகர செட்டில், ஆலங்குளம் பாரதி நகரைச்  சேர்ந்த சங்கிலி கண்ணன்(43) என்பவர் ராக்கெட் வெடி களை தயாரித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதை யடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

நின்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதி ஒருவர் பலி

விருதுநகர், செப்.8- விருதுநகரில் நின்று கொண்டிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். விருதுநகர் அருகே உள்ளது பாண்டியன் நகர்.  இங்குள்ள முள்ளுமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சபாபதி(58). இவர் தனது இரு சக்கர  வாகனத்தில் பேராலி சாலையில் சென்று கொண்டி ருந்தார். தனியார் ஆலை அருகே, நின்று கொண்டிருந்த லாரி மீது,  எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனம் மோதி யது. இதில் படுகாயமடைந்த சபாபதி சம்பவ  இடத்தி லேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் கார்த்திக் குமார், விருது நகர் கிழக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரிக்கின்றனர்.

சிவகாசி அருகே பட்டாசுகளை பதுக்கியவர் மீது வழக்கு

சிவகாசி, செப்.8- சிவகாசி அருகே அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி யவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். சிவகாசி கிழக்கு காவல்நிலைய சார்பு ஆய்வாளர்  பாண்டியன் தலைமையிலான போலீசார் சுப்பிரமணிய புரம் காலனியில் ரோந்து சென்றனர். அப்போது, தனியார்  நிறுவனம் அருகே முழுமையாக தயாரிக்கப்பட்ட பட்டாசு  பண்டல்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், தட்டு மேட்டுத்  தெருவைச் சேர்ந்த திருப்பதி (36) என்பவர் மீது வழக்குப்  பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதுகுளத்தூர் அருகே  முன்விரோதத்தில் ஒருவர் கொலை

இராமநாதபுரம், செப்.8- இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள புழுதிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி  மகன் கோபால்சாமி (40) என்பவருக்கும்  அதே கிரா மத்தை சேர்ந்த செல்லம் மகன்  மோகன் என்பவருக்கும் ஏற்பட்ட தகராறில்  கோபால்சாமி காயமடைந்த நிலை யில் இறந்து விட்டார். இச்சம்பவம் கடந்த மே மாதம் நடந்தது. சம்பவம் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடை பெற்று வருகிறது. இதில் தொடர்பு உடைய மோகன் கீழத்தூவல் காவல் நிலையத்தில் கண்டிசன் பெயிலில் கையெழுத்து போட்டு வருகிறார். இந்நிலையில் சனிக்கிழமை அன்று காலையில் மோகன் கையெழுத்து போடுவதற்கு காவல் நிலையம் சென்ற போது கீழத்தூவல் காவல் நிலையம் அருகேயே  மூன்று பேர் சேர்ந்த மர்ம கும்பல் மோகனை சரமாரி யாக அரிவாளல் வெட்டினர். இதில் சம்பவ இடத்தி லேயே மோகன் இறந்தனர் இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இக்கொலை சம்பவம் தொடர்பான மர்ம கும்பலை  கீழத்தூவல் போலீசார் தேடி வருகின்றனர்

வேலைக்கு போலி உத்தரவு: ரூ.10 லட்சம் ஏமாற்றியவர் கைது

சிவகங்கை, செப்.8- உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (ஏபிஆர்ஓ) வேலைக்கு போலி உத்தரவு கொடுத்து ரூ.10 லட்சத்தை ஏமாற்றியவரை சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீ சார் கைது செய்தனர்.  சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மேல  வண்ணாரிருப்பைச் சேர்ந்த வர் சக்திவேல் (41). தனி யார் கல்லூரியில் உடற் கல்வி ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இவரிடம்  தனக்கு தெரிந்த அதிகாரி கள், அலுவலர் வேலை வாங்கித் தருவதாக பிரான்  மலையைச் சேர்ந்த சேவுக மூர்த்தி (43) என்பவர் கூறி னார். இதை நம்பிய சக்தி வேல், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரூ.10 லட்சத்தை சேவுகமூர்த்தி, அவரது மனைவி சாந்தி ஆகியோரிடம் கொடுத்தார். அவரிடம் சிவகங்கை செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் வேலைக்கு பணி உத்தரவு வழங்கினர். தொடர்ந்து பணி யில் சேர வந்தபோது அந்த  உத்தரவு போலி என்பது தெரியவந்தது. பின்னர், தான் கொடுத்த  பணத்தை சேவுகமூர்த்தி, அவரது மனைவியிடம் கேட்ட போது பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி னர். இதுகுறித்து சக்திவேல் அளித்த புகாரின் பேரில், மாவட்ட குற்றப் பிரிவு டிஎஸ்பி ஆத்ம நாதன், ஆய்  வாளர் மன்னவன் ஆகியோர் சேவுகமூர்த்தியை கைது  செய்தனர்.

விநாயகர் ஊர்வலம் கூடுதல் பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்ய வேண்டும்

ஸ்ரீவில்லிபுத்தூர், செப்.8- ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் விநா யகர் சதுர்த்தியையொட்டி ஒவ்வொரு வருட மும் மத ஒற்றுமையை சீர்குலைக்கும் விதத்தில் விநாயகர் ஊர்வலம் இந்து முன்  னணி அமைப்பு நடத்துகிறது. சர்ச் பகுதியிலும், மசூதி பகுதியிலும் காவல்துறையினர் முன்னிலையில் கூக் குரல் இட்டவாறு அச்சத்தை உண்டாக்கி வருகிறது. இந்த ஆண்டு திங்களன்று மாலை விநாயகர் ஊர்வலம் நடைபெற உள்ளது. நகர் பகுதியில் மொத்தம் 21 சிலைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் விநாயகர் ஊர்வ லத்தை அமைதியாக நடத்துவதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜா தலைமையில் நகர்  காவல்துறையினர் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு  முன்பாக மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் ஆய்வு செய்தார்.  அமைதியான முறையில் ஊர்வலம் நடைபெறும் வகையில் தேவையான நட வடிக்கைகளை காவல்துறையினர் எடுக்க  வேண்டும் என்று பொதுமக்களும் வணி கர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.  மதப் பதற்றத்தை உண்டுபண்ணும் இந்து முன்னணியின் தொடர் முயற்சியை காவல்துறை தடுத்து நிறுத்திட வேண்டும்  என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.