districts

சிஐடியு கோரிக்கையை ஏற்று இன்று மீனவர் குறைதீர் கூட்டம் நடத்த ஆட்சியர் அறிவிப்பு

இராமநாதபுரம், ஜூலை 7- சிஐடியு கடல் தொழிலா ளர் சங்கத்தின் கோரிக்கை யை ஏற்று இன்று மீனவர் குறைதீர் கூட்டம் நடத்த இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளி யிட்டுள்ளார். இராமேஸ்வரம் சங்கு மால் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 20 கிராம நாட்டுப் படகு மீனவர்களின் பயன் பாட்டிற்கு ஏதுவாக மீன்பிடி மிதவைகள் மற்றும் மீன்பிடி வலைகள் ஆகியவற்றை பாதுகாப்பாக வைத்துச் செல்வதற்கும், மீன்பிடி வலை கள் பழுது பார்ப்பதற்கும்  மீன் விற்பனைக்குமான கட்டி டங்கள் மீன்வளத்துறை மூல மாக அமைத்துத் தர வேண் டும். அதுவரை மேற்படி துறை  முக நிலத்தில் தற்காலிக  குடிசைகள் அமைத்துக் கொள்ள இடம் ஒதுக்கி தர  வேண்டும். இப்பகுதி நாட் டுப்படகு மீனவர்களின் நூற்  றாண்டு பயன்பாட்டில் இருந்து வந்த சங்குமால் மீன்பிடி துறைமுகத்தில் மாவட்ட ஆட்சியர் நிர்வாகம் சமீப 20 வருடங்களுக்கு முன்பு தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி திட்டத்தின் கீழ்  சிறுவர் பூங்கா அமைத்ததை யொட்டி மீனவர்களுக்கு அதே துறைமுகத்தின் எதிர்  புறம் மாற்று நிலம் வழங்கி யதையொட்டி அதில் மீன வர்கள் குடிசைகள் ஏற் படுத்தி தங்கி தொழில் செய்து வந்த சூழலில் சமீபமாக 5 முதல் 10 வருடங்களுக்கு முன்பு மேற்படி நிலத்தின் பின்புறம் இருந்த தனியார் நிலங்களை கிரையம் பெற்ற உள்ளூர் மற்றும் வடமாநில  தொழிலதிபர்கள் மேற்படி நிலங்களில் அரசின் சிஆர்இசட் (CRZ) விதிகளுக்கு மாறாக இரண்டு முதல் மூன்று மாடி வரை கொண்ட சொகுசு தங்  கும் விடுதிகள் கட்டியுள்ளது டன் புதிதாக கட்டியும் வரு கின்றனர்.

அதனை தொடர்ந்து தங்கள் நிலத்தின் அருகில் மீனவர் பயன்பாட்டில் இருந்த நிலம் அரசு பாதை புறம் போக்கு நிலம் என கூறி பல்  வேறு நெருக்கடிகள் கொடுத்து மீனவர்களை மிரட்டி அவர்  களின் குடிசைகளை காலி  பண்ண செய்து விட்டு அதே  பாதை புறம் போக்கு நிலத்தை இவர்கள் ஆக்கிர மிப்பு செய்து தங்கள் சொந்த பயன்பாட்டிற்கு கொண்டு வந்தும் உள்ளனர்.எனவே மேற்படி நபர்களின் ஆக்கி ரமிப்பில் உள்ள அரசு பாதை புறம் போக்கு நிலத்தை மீட்டு  அதனை மீண்டும் மீனவர்  பயன்பாட்டிற்கு கொண்டு  வர வேண்டும் என்ற கோரிக்  கையை முன்வைத்து ஜூலை 7 அன்று சிஐடியு கடல் தொழிலாளர் சங்கத்தின்  மாவட்டச் செயலாளர் எம். கருணாமூர்த்தி தலைமை யில் எம்.தர்மராஜ் மற்றும் 20 கிராம மீனவர்கள் சார்பில் இராமேஸ்வரம் மீன்வளத் துறை உதவி இயக்குநர் சிவ ராமச்சந்திரன் மற்றும் இராமேஸ்வரம் நகராட்சி  ஆணையாளர், இராமேஸ்  வரம் வட்டாட்சியர் ஆகி யோரை சந்தித்து மனுக்கள் கொடுக்கப்பட்டன. இந்நிகழ்வில் கே.பஞ்சா, எம்.பாண்டி, சி.தனசேக ரன்,எஸ்.வி. சக்திவேல், என். நம்புகாந்தி, கே.கணேசன், ஸ்டீபன் மற்றும் 100க்கும் அதிகமானோ கலந்து கொண் டனர். ஆட்சியருக்கு நன்றி சிஐடியு கடல் தொழிலா ளர் சங்கம் சார்பில் முன் வைக்கப்பட்ட மீனவர் நலன்  சார்ந்த நியாயமான கோரிக்  கையை பரிசீலித்து மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்  டத்தினை ஜூலை 8 அன்று  நடத்திட அறிவிப்பு செய்த  மாவட்ட ஆட்சி தலைவ ருக்கு கடல் தொழிலாளர் சங்க மாநில செயல் தலைவர் எம்.  கருணாமூர்த்தி நன்றி தெரி வித்தார்.