districts

img

புதிய நூலக கட்டிடத்தை விருதுநகர் ஆட்சியர் திறந்து வைத்தார்

திருவில்லிபுத்தூர் ஜூலை 27- திருவில்லிபுத்தூர் அருகே உள்ள வடக்கு கரி சல்குளம் கிராமத்தைச் சேர்ந்த காலம் சென்ற ஆடிட்  டர் கோ. தங்கையா நினை வாக அவரது குடும்பத்தார் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அரசு ஆதிதிராவிடர் நல  மேல்நிலைப் பள்ளி வளா கத்தில் புதிய நூலக கட்டி டத்தினை கட்டியுள்ளனர். அந்த புதிய கட்டி டத்தினை மாவட்ட ஆட்சி யர் வி பி ஜெயசீலன் தலை மை வகித்து திறந்து வைத்  தார். தர்மராஜன் முன்னிலை வகித்தார். திருவில்லி புத்தூர் தாசில்தார் செந்தில் குமார் ஆதி திராவிட நலத்  துறை அதிகாரி வித்யா, ஊராட்சி ஒன்றிய ஆணை யாளர் சிவகுமார் மற்றும்  அரசு அதிகாரிகள் ஊர் பொதுமக்கள் பள்ளி ஆசிரி யர்கள் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். நூலக கட்டிட நன்கொடையாளர் அசோக்குமார் நன்றி கூறி னார்.