திருநெல்வேலி, டிச. 2- நெல்லை மாவட்டத்தில் மானூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான தென்கலம், செழியநல்லூர். பள்ள மடை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிணற்று பாசனத் தை நம்பி மலர் சாகுபடி, காய்கனி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வெண்டை, கத்தரி, தக்காளி ஆகியவை அதிகம் பயிரி டப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் தக்காளிக்கு நல்ல விலை கிடைத்து வந்தது. தற்போது, ஆந்திர மாநிலத்தில் இருந்து தக்காளி வரத்து மிகவும் அதிகரித்துள்ளதாலும், தமிழகத் தில் பல இடங்களில் மகசூல் அதிக ரிப்பாலும் தக்காளி விலை மிகவும் சரிந்துள்ளது. தோட்டங்களில் இருந்து கிலோவுக்கு ரூ.2 முதல் ரூ.5 வரை மட்டுமே விலை கொடுத்து வியாபாரிகள் கொள் தல் செய்து வருகிறார்கள். போதிய விலையின்மையால் விற்பனை செய்யாமல் தக்காளியைப் பறித்து கால்நடைகளுக்கு உணவாகவும், வயலுக்கு உரமாகவும் போடும் நிலைக்குத் விவசாயிகள் தள்ளப் பட்டுள்ளனர்.