districts

img

கண்டரமாணிக்கத்தில் திட்டங்களுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

சிவகங்கை, மார்ச் 6-  சிவகங்கை மாவட்டம் திருப்பத் தூர் தாலுகா கண்டரமாணிக்கம் ஊராட்சியில் நன்கொடையாளர் களால் உருவாக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார்.  கண்டரமாணிக்கம் ஊராட்சி யில் சுப்பிரமணியம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நன்கொடை யாளர் ராஜரத்தினம் ரூ.37.50 லட்சம் நன்கொடையாக வழங்கினார். நமக்கு நாமே திட்டத்தில் அரசு பங்க ளிப்பு ரூ.37 லட்சமும் சேர்த்து ரூ. 74.50 லட்சம் கூடுதல் கட்டிடம் கட்டு வதற்கான அடிக்கல் நாட்டும் பணி மருத்துவமனை வளாகத்தில் நடை பெற்றது.  கண்டரமாணிக்கம் ஊராட்சி யில் ரூ.10.30 லட்சம் நிதியில் 7 இடங்களில் ஆழ்துளை கிணறுகள், மின்விசை பாம்புகள் அமைக் கப்பட்டுள்ளன. ரூ.2.13 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள 21 கண்காணிப்பு கேமராவை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.  கண்டரமாணிக்கம் ஊராட்சி யின் வளர்ச்சிக்கு தங்களை முழு மையாக ஈடுபடுத்திக் கொண்டு நற் பணிகளை மேற்கொண்டு வரும் நன்கொடையாளர்களை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் வாழ்த்தி பாராட்டினார்.  விழாவில் கண்டரமாணிக்கம் வளர்ச்சி குழு தலைவர் மணிகண் டன், செயலாளர் ஆறுமுகம் திருப் பத்தூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சண்முகவடிவேல், சேதுபாஸ்கரா கல்விக் குழுத்தலை வர் டாக்டர் சேதுகுமணன், கண்ட ரமாணிக்கம் ஊராட்சி மன்ற தலை வர் ராமு, கனகுகருப்பையா, பொதுப்பணித் துறை செயற்பொறி யாளர் பாரதிதாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.