மதுரை, ஏப்.9- மதுரை மாநகராட்சி மண்ட லம் 3 வார்டு எண்.75 சுந்தரராஜ புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட் டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டி டத்தை மேயர் வ.இந்திராணி பொன்வசந்த், மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.அனீஷ்சேகர் முன் னிலையில் தமிழக நிதி- மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஏப்ரல் 9 அன்று திறந்து வைத்தார். தமிழக அரசின் உத்தரவின் படி மதுரை மாநகராட்சியில் பல் வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி மண்டலம் 3 வார்டு எண்.75 பகுதியில் உள்ள சுந்தரராஜபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் வசதிக்காக 2019- 2020 ஆம் ஆண்டு கல்வி நிதியின் கீழ் ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடு தல் வகுப்பறை கட்டிடம் அமைச்ச ரால் திறந்து வைக்கப்பட்டு பயன் பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள் ளது. இக்கட்டிடத்தின் தரைத் தளத்தில் அங்கன்வாடி மையம், தலைமை ஆசிரியர் அறையும், முதல் தளத்தில் இரண்டு வகுப் பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள் ளது. மேலும் தண்ணீர் வசதி, மின் விளக்குகள் வசதி, பள்ளி மாண வர்களை ஊக்கப்படுத்தும் வகை யில் வெளிப்புற சுவற்றில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வைகை ஆற்று பகுதி ஆழ்வார் புரத்தில் அருள்மிகு கள்ளழகர் எழுந்தருளும் இடத்தில் மேற் கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அமைச்சர், ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் ஆகி யோர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து மதுரை மாநக ராட்சி திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக ரூ.78.73 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக வாங்கப் பட்டுள்ள இரண்டு காம்பேக்டர் வாகனங்களை மாண்புமிகு அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார் .இந்த வாகனங்கள் மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிகளில் சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், உதவி ஆணையாளர்கள் சுரேஷ்குமார், மனோகரன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், கள் ளழகர் திருக்கோவில் உதவிப் பொறியாளர் கிருஷ்ணன், தெற்கு மண்டல தலைவர் முகேஷ்சர்மா, மாமன்ற உறுப்பினர்கள் கமணி, பாண்டிச்செல்வி உட்பட மாநக ராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.