districts

உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்பு

சென்னை, ஜூன் 27- ஆகம விதிகளில் தேர்ச்சிபெற்ற யாரை யும் அர்ச்சகராக நியமிக்கலாம். என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:  ஆகம விதிகளில் தேர்ச்சி பெற்ற தகுதி யான நபர்களை குறிப்பிட்ட ஆகம விதி களைப் பின்பற்றும் கோயில்களில் அர்ச்சகர் களாக நியமிக்கலாம். அதற்கு எந்தவொரு சாதியும் தடையாக இருக்கக் கூடாது என்ற  சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு  மாநிலச் செயற்குழு வரவேற்கிறது. அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராக வேண்டுமென்று வழிசெய்யும் சட்டத்தினை டாக்டர் கலைஞர் அவர்கள் 1970 ஆம் ஆண்டு  நிறைவேற்றினார். அச்சட்டத்தினை தொடர்ந்து செயல்படவிடாமல் சனாதன சக்திகள் இழுத்தடித்து வந்தனர். தற்போது அச்சட்டத்தை நடைமுறைப்படுத்தி தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அர்ச்சகர்  நியமன உத்தரவுகளை வழங்கிய இப்போ தும் இதற்கு தடை விதிக்க வேண்டுமென சொத்தை காரணங்களுக்காக சனாதன சக்திகள் வழக்குத் தொடுத்து இழுத்தடித்து  வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத் தின் மேற்கண்ட தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  உள்ளிட்டு ஜனநாயக, முற்போக்கு இயக்கங்  கள் கோரிவரும் அனைத்துசி சாதியினரும்  அர்ச்சகராக வேண்டுமென்ற கோரிக்கைக்கு வலுவும் சேர்க்கிறது. எனவே, தமிழ்நாட்டில் தேவையான அளவு அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளை திறந்து  பட்டயப்படிப்பு மட்டுமின்றி பட்டப்படிப்பை யும் உருவாக்கி, சாதி வித்தியாசம் இன்றி அனைத்துக் கோவில்களிலும் அர்ச்சகர் பணி நியமனம் செய்திட வேண்டுமென மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை  வலியுறுத்துகிறது.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள் ளது.