திருவனந்தபுரம், செப் 1- ஜன்மைத்ரி என்கிற சமுதா யக் காவல் முறையை அமல் படுத்துவதன் ஒரு பகுதியாக கடந்த 2007இல் இடதுசாரி அரசு கொண்டு வந்த ஜன்மைத்ரி சுரக்ஷா திட்டம் முழு நாட்டிற்கும் முன்மாதிரியாக உள்ளது என்று முதல்வர் பின ராயி விஜயன் கூறினார். கேரள சட்டப்பேரவையில் வியாழனன்று (செப்.1) என். ஷம்சு தீனின் சமர்ப்பித்த மனுவுக்கு முதல்வர் பதிலளித்தார். அப்போது அவர் மேலும் கூறியதாவது: பெண்கள் மற்றும் குழந்தைகளு க்கு எதிரான வன்கொடுமைக ளைத் தடுப்பது, முதியோர், பழங் குடியினர் மற்றும் பாதிக்கப்படக் கூடிய பகுதியினரின் பாதுகாப்பு, புலம்பெயர்ந்த தொழிலாளர்க ளைக் கண்காணித்தல் போன்ற பல்வேறு திட்டங்கள் ஜன்மைத்ரி யின் ஒரு பகுதியாக திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஜன்மைத்ரி சுரக்ஷா திட்டம் ஏற்கனவே அனைத்து காவல் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப் பட்டுள்ளது. அனைத்து காவல் நிலையங்களிலும் ஜன்மைத்ரி சுரக்ஷா சமிதி அமைக்க வேண்டும் என்றும், மாவட்ட காவல்துறை தலைவர் தலைமையில் மாவட்ட ஆலோசனைக் குழு, மக்கள் பிரதி நிதிகள் மற்றும் உள்ளூர் முக்கிய பிரமுகர்களை அக்குழுவில் சேர்க்க வேண்டும் என்றும் தெளி வான வழிகாட்டுதல் உள்ளன. சமூக காவல் துறை இயக்கு நரகம் ஐஜி அந்தஸ்து அதிகாரி யின் கீழ் செயல்படுகிறது. இயக்கு நரகத்தின் பணிகளை வலுப் படுத்தி, காவல் நிலையங்களை மக்கள் நட்புறவு கொண்டதாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்துள் ளது. மாவட்ட அளவிலான காவல்துறை ஆலோசனைக் குழுவின் நோக்கங்களை சமூகக் காவல் மூலம் அடைய முடியும் என்பதைக் கருத்தில் கொண்டு, காவல்துறை ஆலோசனைக் குழுக்களைத் தொடர வேண்டாம் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.
பிரதமர் கேரளப் பயணம்
திருவனந்தபுரம், செப். 1- கொச்சியில் புதிய மெட்ரோ திட்டம் உட்பட பல்வேறு திட் ்டங்களை துவக்கி வைக்க பிர தமர் நரேந்திரமோடி செப்.1,2 வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாட்கள் பயணமாக கேரளா வந்துள்ளார். வியாழனன்று (செப்.1) மாலை 4.25 க்கு கொச்சிக்கு விமானத்தில் வந்த பிரதமர் பாஜக நிகழ்ச்சியிலும், காலடி ஸ்ருங்கார மடத்தில் நடந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். பின்னர் கொச்சி புதிய மெட்ரோ ரயில் பாதையை துவக்கி வைத்தார். வெள்ளி யன்று ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்நிகழ்ச்சி யில் முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்க உள்ளார்.