மனுக்களை பெற்ற எஸ்.பி
விருதுநகர், ஆக.24- விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வியா ழக்கிழமை நடைபெற்றது. இதில் எஸ்.பி. ஸ்ரீனிவாச பெருமாள் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார். பின்பு, அம்மனுக்கள் மீது உரிய நட வடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலு வலர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என உறுதி யளித்தார்.
மனைவி தள்ளி விட்டதில் கணவர் கீழே விழுந்து பலி
மதுரை, ஆக.24- மதுரை புதுநாமநாதபுரம் சாலை பழைய மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் மகாராஜா (34). இவர் பிளாஸ்டிக் பை தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி செல்வி. இவர் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பணி புரிந்து வருகிறார். மகாராஜாவுக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதால் அவர் தினசரி மது அருந்தி விட்டு வீட்டில் மனைவி செல்வியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் புதனன்று இரவும் மகாராஜா மது அருந்தி விட்டு மனைவி செல்வியுடன் தகராறில் ஈடு பட்டுள்ளார். மேலும் மனைவியை அடிக்கச் சென்றபோது அவர், மகாராஜா தடுத்து தள்ளியுள்ளார். இதில் கீழே விழுந்த மகாராஜாவை, செல்வி அப்பகுதி யினர் உதவியுடன் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மகாராஜாவை பரிசோதித்த மருத்து வர்கள் அவர் வழியிலேயே உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். இந்நிலையில் வியாழனன்று மகாராஜாவின் தாய் சுந்தரி அளித்த புகாரின்பேரில் தெப்பக்குளம் காவல்துறை யினர் மகாராஜன் மனைவி செல்வியை கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
மனு கொடுக்கும் போராட்டம்
திண்டுக்கல்: பாளையம் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.594 வழங்கிட கோரி புதனன்று திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் பாளையம் பேரூராட்சியில் மனு கொடுக்கப்பட்டது. நிகழ்வில், மாவட்டப் பொருளாளர் ராணி, மாவட்டக் குழு உறுப்பினர் சி.பாலசந்திரபோஸ், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் பி.பாலசுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விபத்தில் ஆசிரியர் பலி
தேனி: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரைச் சேர்ந்தவர் விஜய்பாபு (41). இவர் தேனி மாவட்டம் ஆண்டி பட்டி அருகில் உள்ள ராஜதானி கள்ளர் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் தேனி மெயின்ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பைக்கில் இருந்து விழுந்து படுகாயம் அடைந்தார். தேனி க.விலக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜய்பாபு உயிரிழந்தார்.
தூக்கு போட முயன்றவர் கீழே விழுந்து பலி
தேனி: போடி குலாலர்பாளையம் தண்ணீர் தொட்டி அருகே வசிப்பவர் முருகன் மகன் சதீஸ்குமார் (36). இவர் தம்பி மதன் என்பவருடன் சேர்ந்து போடி ரெங்கநாத புரத்தில் வாகன பழுது நீக்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். மதனுக்கு திருமணமான நிலையில் சதீஸ்குமா ருக்கு பல இடங்களில் பெண் பார்த்தும் திருமணமாக வில்லை. இதனால் சதீஸ்குமார் மனமுடைந்து காணபபட்டார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (ஆக.18). இரவு பழுது நீக்கும் கடையில் தான் படுத்துக் கொள்வ தாக கூறி மதனை வீட்டிற்கு அனுப்பிய சதீஸ்குமார், கடை யின் பின்புறம் இரும்பு கம்பியில் தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதில் கயிறு அறுந்து கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். உடனே சதீஸ்குமாரை மீட்டு போடி அரசு மருத்து வமனையிலும், தீவிர சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சேர்த்த னர். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை (ஆக.24) உயிரிழந்தார்.
ஒட்டன்சத்திரம் அருகே சிறுத்தை? வீடியோ பரவியதால் பரபரப்பு
ஒட்டன்சத்திரம்: பாலத்தின் கீழ் சிறுத்தை அமர்ந்தி ருப்பது போல் வெளியான வாட்ஸ்அப் வீடியோவால் ஒட்டன்சத்திரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பழனி செல்லும் சாலையில் இருந்து சாமியார்புதூர் செல்லும் சாலையில் நங்காஞ்சி ஆற்றிற்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் கீழ் பகுதியில் ஒரு சிறுத்தை அமர்ந்திருப்பது போன்ற வீடியோ ஒட்டன்சத்திரம், இடையக்கோட்டை, கள்ளிமந்தையம் பகுதியில் வாட்ஸ்அப் குழுவில் வேகமாக பரவி வந்தது. இதனால் கிராம மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சாமியார்புதூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி உள்ளதால் உண்மையிலேயே சிறுத்தை வந்திருக்கலாம் என்று கிராம மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஒட்டன்சத்திரம் வனத்துறை அலு வலர்களிடம் கேட்டபோது, இந்த வீடியோவில் உள்ள சம்பவம் வெளி மாநிலங்களில் நடந்தது. ஆனால், ஒட்டன் சத்திரம் பகுதியில் நடந்தது போல திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுகிறது’’ என்றனர்.
மேகமலை அருவியில் குளிக்க தடை அகற்றம்
கடமலைக்குண்டு: தேனி மாவட்டம் கோம்பைத் தொழு அருகே மேகமலை அருவி அமைந்துள்ளது. நீர்வரத்து உள்ள நாட்களில் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிக்கு வந்து செல்வது வழக்கம். கடந்த 3 மாதங்களாக மேகமலை வனப்பகுதியில் போதிய அளவு மழை இல்லாததால், அருவியில் நீர்வரத்து முற்றிலுமாக நின்று போனது. சுற்றுலா பயணி கள் குடிநீர் தொட்டியில் குளித்து குடிநீரை மாசுபடுத்தும் நிலை காணப்பட்டது. இதனால் மேகமலை வனத்துறை யினர் அருவிக்கு செல்ல சுற்றுலாப் பணிகளுக்கு தற்கா லிக தடை விதித்தனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களாக மேகமலை வனப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், புதனன்று அருவியில் நீர்வரத்து ஏற்பட்டது. இதை யடுத்து சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை வனத்துறையினர் அகற்றியுள்ளனர்.
நத்தம் பகுதியில் தேனீக்கள் கொட்டியதில் 50 பேர் காயம்
நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பண்ணு வார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னபள்ளபட்டியில் ஏழு மடை கண்மாயில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடந்து வருகின்றன. இதில் ஏராளமான பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில், வியாழனன்று இந்தப் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, பெண் தொழிலா ளர்களை தேனீக்கள் திடீரென கொட்டத் தொடங்கியது. இதில் 50 பெண் தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். பின்னர் தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்த வர்களை மீட்டு சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவ மனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் வீடு திரும்பினர்.