districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில 23 ஆவது மாநாடு தூத்துக்குடியில் இருந்து கொடி பயணம் துவங்கியது

தூத்துக்குடி, மார்ச் 29- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 22 ஆவது தமிழ் மாநில மாநாடு “தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்றால் இந்த ஜெகத்தினை அழித் திடுவோம்” என முழக்கமிட்ட மகா கவி பாரதியாரும், செக்கிழுத்த செம் மல் வ.உ.சி, போன்ற சுதந்திர போராட்ட வீரர்கள் பிறந்த தூத்துக்குடி மண்ணில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17- 20 ஆகிய தேதி களில் மிக எழுச்சியாக, கோலாகல மாக தென் தமிழகத்தில் நடைபெறும் திருவிழா போல் ஊரெங்கும் செங் கொடி பறக்க, செங்கொடி இயக்க செந்தொண்டர் படைகளின் எழுச்சி மிகு பேரணி உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் நடைபெற்றது. இந்நிலையில் முதல் தமிழ் சங்கம் நிறுவிய மதுரை மண்ணில் நடை பெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 23 ஆவது மாநில மாநாட்டில் ஏற்றப்பட உள்ள மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் செங்கொடி பய ணம் தூத்துக்குடி மாவட்டத்தில் செவ் வாயன்று பழைய பேருந்து நிலையம் அருகில் இருந்து துவங்கியது. மாநாட்டுச் செங்கொடிப் பயணம் சிபிஎம் தூத்துக்குடி மாவட்டச் செய லாளர் கே. பி.ஆறுமுகம் தலைமை யில், தூத்துக்குடியில் இருந்து புறப் பட்டது. சிபிஎம் மாநில குழு உறுப்பி னர் கே.எஸ் அர்ஜுனன் செங்கொடி யை எடுத்து கொடுக்க தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் பெற்றுக் கொண்டார். தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் சிபிஎம் மாநகர் செயலாளர் தா.ராஜா தலைமையில் எழுச்சி முழக்கங்களுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரசல், அப்பாதுரை, பேச்சி முத்து, புவி ராஜ், பூமயில், ஒன்றிய செயலாளர் சங்கரன், புறநகர் செயலாளர் ராஜா மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் குறுக்குச்சாலையில் சிவப்பு வண்ண பட்டாசுகள் முழங்க செங்கொடிக்கு ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் சண்முக ராஜ் தலைமை யில் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. இதில் மாவட்டக்குழு உறுப்பி னர் ராகவன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்ட னர். அதேபோல் மகாகவி பாரதியார் பிறந்த எட்டையபுரம் பேருந்து நிலை யம் அருகில் எட்டையபுரம் தாலுகா செயலாளர் மணி தலைமையில் பட்டாசு வெடியுடன் உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது. இதில் சிபி எம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், விளாத்திகுளம் தாலுகா செயலாளர் ஜோதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் சிங்கங்களின் கர்ஜனை போல் தோழர்களின் கோஷங்கள் முழங்க கோவில்பட்டி நகர் செயலா ளர் , நகர் மன்ற உறுப்பினர் ஜோதிபாசு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் சிபி எம் மாநி லக்குழு உறுப்பினர் ஆர்.மல்லிகா, மாவட்ட செயற்குழு உறுப்பினரும், நகர் மன்ற உறுப்பினருமான கே. சீனிவாசன், கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன், வாலி பர் சங்க மாவட்டத் தலைவர் மணி கண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் செங்கொடியின் மதுரை யை நோக்கிய பயணம் அங்கிருந்து தொடர்ந்தது.