districts

img

நிவாரணத் தொகை வழங்க பட்டாசு ஆலை விபத்தில் பலியானோர் குடும்பம் கோரிக்கை

விருதுநகர், மே 29- சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும் பத்தினர் நிவாரணத் தொகை  வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஜெய சீலனிடம் கோரிக்கை மனு அளித்தனர். சிவகாசி-விளாம்பட்டி சாலை தி. மார்டன் பட்டாசு ஆலை உள்ளது. இங்கு ஏப்ரல் 15-ஆம் தேதி நிகழ்ந்த விபத்தில் இடையன்குளம் கிராமத்தைச் சேர்ந்த கருப்ப சாமி (30), தங்கவேல்(50) ஆகியோர் உயிரிழந்தனர். இவர்களுக்கு ஆலை நிர்வா கம் இழப்பீட்டுத் தொகை யை வழங்கிவிட்டது. ஆனால், தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் நிவாரணத் தொகை வழங்கவில்லை. உயிரிழந்த கருப்பசாமி யின் மனைவி ராஜேஸ்வரி  தனது மூன்று குழந்தைகளு டனும், தங்கவேலின் மனைவி காளீஸ்வரியும் நிவாரணம் வழங்கக் கோரி ஆட்சியர் ஜெயசீலனிடம் கோரிக்கை மனு அளித்த னர். மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் நடவ டிக்கை எடுப்பதாக உறுதி யளித்தார்.

;