districts

பட்டியல் இனத்தவர் மீது வன்கொடுமை வழக்கு டிஎஸ்பிக்கு அபராதம் விதித்தது மனித உரிமை ஆணையம்

சென்னை, ஜன.25- பட்டியலினத்தைச் சேர்ந்தவரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ்கைது  செய்த விவகாரத்தில் திருச்சி மாவட்டம், முசிறி துணை கண்காணிப்பாளருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் 4 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. திருச்சி மாவட்டம், திருத்தலையூரைச் சேர்ந்த சுதாகர், கண்ணனூர் வடக்குவேலி கிரா மத்தில் தனது மாமா தமிழ்ச்செல்வனுக்கு சொந்தமான நிலத்தில் சிதிலமடைந்த வீட்டை இடித்துள்ளார். இது தொடர்பாக துறையூரைச் சேர்ந்த சுமதி என்பவர் புகார் அளித்தார். அதன் பேரில், சுதாகர் மீது வன்கொடுமை சட்டப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தாத்தை யங்கரப் பேட்டை, ஜம்புநாதபுரம் காவல் நிலை யத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட சுதாகரும், பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் வன்கொடுமை தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முடி யாது எனக் கூறி திருச்சி மாவட்ட கூடுதல் நீதி மன்றம், ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்த, அப்போதைய முசிறி டிஎஸ்பி சீதாராமன், ஆய்வாளர் ரவிசக்கரவர்த்தி, உதவி ஆய்வாளர் முருகானந்தம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநில மனித உரிமை ஆணையத்தில் சுதாகர் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை.ஜெயச்சந்திரன், குறிப்பிட்ட நிலத்தில் சுமதி வசிப்பதற்கு எந்த ஆதாரங்க ளும் இல்லாத நிலையில், பட்டியலினத்தைச் சேர்ந்த சுதாகர் மீது வன்கொடுமை தடைச் சட்டத்தின் கீழ் பொய் வழக்கு பதிந்து கைது செய்த நடவடிக்கை மனித உரிமையை மீறிய செயல். எனவே, பாதிக்கப்பட்ட சுதாகருக்கு 5 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இழப்பீட்டு தொகையில் 4 லட்சம் ரூபாயை டிஎஸ்பி-யிடமும், ஆய்வாளர் ரவிசக்கரவர்த்தி மற்றும் உதவி ஆய்வாளர் முருகானந்தம் ஆகி யோரிடம் இருந்து தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் வசூலித்து தர வேண்டும் எனவும் உத்தர விட்டுள்ளார். மேலும், இந்த 3 காவல் அதிகாரி களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை, குற்ற நட வடிக்கை எடுக்கவும் அரசுக்கு மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.