districts

மதுரை முக்கிய செய்திகள்

குடிநீர்த் தொட்டியில் இறந்து கிடந்த நாய் காவல்துறையினர் தீவிர விசாரணை

சிவகாசி, பிப்.6- விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ளது புதுக்கோட்டை கிராமம். இங்கு சுமார்  300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஊரின் அருகிலேயே மேல்நிலை  நீர்த் தேக்கத் தொட்டி ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதிலி ருந்து ஊர் முழுவதும் உள்ள வீடுகளுக்கு குடிநீர் விநி யோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தத் தொட்டியை பத்து அல்லது பதினைந்து நாட்க ளுக்கு ஒருமுறை ஊராட்சிப் பணியாளர் சுத்தம் செய்வது  வழக்கம். கடந்த இரு தினங்களாக மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் குடிநீர் ஏற்றப்படவில்லை. ஊராட்சிப் பணி யாளர், வழக்கம் போல  சுத்தம் செய்வதற்காக மேல்நிலை  நீர்த் தேக்கத் தொட்டியின் மேல் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு துர்நாற்றம் அடித்துள்ளது. உள்ளே  சென்று பார்த்த போது,  நாய் ஒன்று இறந்து கிடந்துள்ளது.  இது குறித்து ஊராட்சிப் பணியாளர்,  ஊராட்சி மன்ற நிர்வாகிகள்- கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார். தகவலறிந்து வந்த சிவகாசி துணைக் காவல் கண்கா ணிப்பாளர் தனஞ்செயன் விசாரணை நடத்தினார். எம். புதுப்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பட்டிவீரன்பட்டிக்கு தேவை கூடுதல் பேருந்து

சின்னாளபட்டி, பிப்.6- திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் 1-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள தனியார்ப் பள்ளி  உள்ளது. இந்தப் பள்ளியில் படிக்கப் பல ஊர்களிலி ருந்து மாணவர்கள் வருகிறார்கள். இவர்கள் நம்பியி ருப்பது அரசுப் பேருந்தை மட்டுமே. இந்தப் பள்ளி மட்டு மல்ல மற்ற ஊர்களிலுள்ள பள்ளிகளுக்கும் வத்தலக் குண்டுவிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் செல்கின்றன. பள்ளி செல்லும் நேரத்தில் குறைந்தளவே அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால் மாண வர்கள் பேருந்து நிற்பதற்குள் ஒருவரை ஒருவர் தள்ளிக்  கொண்டு முண்டியடித்து பேருந்துகள் ஏறுகின்றனர். மாண வர்கள் நலன் கருதி பட்டிவீரன்பட்டி வழித்தடத்தில் கூடு தல் பேருந்துகள் இயக்க வேண்டும் வேண்டுமெனப் பார்வை மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தல்

இராமநாதபுரம், பிப்.6- இராமநாதபுரம் மாவட்டத்தில் நவம்பர் டிசம்பர் மாதங்களில் பெய்ய வேண்டிய மழை பெய்யவில்லை. மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் முடிய 680.72 மிமீ  மழை பெய்துள்ளது இயல்பாக 827 மி.மீ மழை பெய்தி ருக்க வேண்டும். இதனால் மாவட்டத்தில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்  கப்பட்ட பகுதிகளை வருவாய் மற்றும் வேளாண் அலு வலர்கள் பார்வையிட்டனர். தற்போது கணக்கெடுக்கும் பணியும் நடைபெற்று வருகிறது இப்பணிகளை வேளாண் இயக்குநர் நடராஜன், பரமக்குடி கூடுதல் ஆட்சி யர் ஆய்வு செய்தனர். முதுகுளத்தூர் கடலாடி வட்டாரம்  தேரிருவேலி, ஏனாதி கிராமங்களில் வறட்சி பாதித்த பகுதி களை உதவி ஆட்சியர் நாராயண சர்மா ஆய்வு செய்தார். விவசாயிகளோ, இராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தினர்.

தந்தை-மகள் தீக்குளிக்க முயற்சி

விருதுநகர், பிப்.6- விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த அழகர்சாமி மகள் சித்ராதேவி. இவருக்கும் அருப்புக்கோட்டை ஆத்தி பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் 2017-ஆம் ஆண்டுத் திருமணம் நடைபெற்றது. ரமேஷ் கடந்த சில மாதங்களாகச் சித்ராதேவியிடம் வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ரமேஷ், “ நாம் இருவரும் தனிமை யில் இருக்கும் புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்க ளில் வெளியிடுவேன் எனக் கூறி கொலை மிரட்டல் விடுத்த தாகச் சித்ராதேவி விருதுநகர் மாவட்டக் காவல் கண்கா ணிப்பாளரிடம் புகார் அளித்திருந்துள்ளார். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனக் கூறப்படுகிறது. இதனால் மனம் உளைச்சலுக்கு உள்ளான சித்ராதேவி,  அவரது தந்தை அழகர்சாமி இருவரும் திங்களன்று காலை  விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். திடீரென இருவரும் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றித் தீக்குளிக்க முயற்சித்தனர். பாதுகாப்புப்  பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களது முயற்சியை முறியடித்துச் சூலக்கரை காவல் நிலையத் திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை இந்த நிலையில் காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “விருது நகர் மாவட்டத்தைச் சேர்ந்த “மக்கள், மாவட்ட ஆட்சியர்- காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து அளிக்கப்படும் புகார் மனுக்களுக்கு முறையாக நடவடிக்கை எடுத்துத் துரிதமாகத் தீர்வு காணப்பட்டு வருகிறது. யாரும் உயிரை மாய்த்துக் கொள்வதாகக் கூறி புகாரளிக்க வந்  தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட ஆட்சி யர்- காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மனுக்  கொடுக்க வருபவர்கள் மண்ணெண்ணெய், பெட்ரோலு டன் வந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.'

கட்டடத் தொழிலாளிகளைத் தாக்கிய  வனத்துறை ஊழியர்கள் மீது வழக்கு

திருவில்லிபுத்தூர், பிப். 6- திருவில்லிபுத்தூர் மம்சாபுரம் மறவர் தெருவில் வசிப்பவர் ராமர்  (23). இவர் தனது தந்தைக்குச் சொந்தமான விளை நிலம் வனப்பகு திக்குள் உள்ளது. செண்பகத்தோப்பு காட்டுப் பகுதிக்குள் செல்ல ரூ.20  கட்டணமாக வனத்துறையினர் வசூலித்துள்ளனர்.  இது தொடர்பாக வனத்துறையினருக்கும் ராமர் குடும்பத்தினருக்கும் கருத்து வேறுபாடு  இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த கடந்த 2022-ஆம் ஆண்டு  அக்டோபர் மாதம் 24-ஆம் தேதி  ராமரும் அவர் தம்பி லட்சுமணனும் கட்டட வேலைக்குச் சென்று விட்டு குட்ட தட்டி மலை அருகே வந்த போது திருவில்லிபுத்தூர் வனத்துறை ஊழியர்கள் பாரதி, ஜெயக் குமார், கடற்கரைவேல் ஆகியோர் இருவரையும்  வலுக்கட்டாயமாகக் கோட்டைப்பட்டி வனத்துறை அலுவலகத்திற்கு இழுத்துச் சென்று கடுமையாகத்தாக்கினர். இதையடுத்து ராமர் தன்னையும் தனது தம்பி லட்சுமணனையும் தாக்கிய வனத்துறை ஊழியர்கள் மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனு செய்தனர் மனுவை விசாரித்த  நீதிபதி வள்ளி மனாளன் வனத்துறை ஊழியர்கள் மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டார்

மதுரை அருகே விபத்து  ஒருவர் பலி;19 பேர் காயம்

ம் மதுரை, பிப்.6- திசையன்விளையிலிருந்து கோயம்புத்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து திங்கள் காலை  மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை விராலிபட்டி அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் தனியார் பேருந்தில் பயணம் செய்த திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா எட்டு ரோடு, காமாட்சிபுரத்தைச் சேர்ந்த முருகன் (32) என்ப வர் பலியானார். பேருந்திலிருந்த 19 பயணிகள் காயம டைந்தனர். வாடிப்பட்டி காவல்துறையினர் விசாரித்த னர். உசிலம்பட்டியில் 

உசிலம்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மதுரை, பிப்.6- ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் மாற்றுத்திறனாளி கள் துறையினருக்கான நிதி குறைக்கப்பட்டதற்கும், மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் தேசிய ஊரக வேலை  உறுதித் திட்டத்துக்கான நிதி குறைக்கப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்துத் தமிழ்நாடு அனைத்து வகை  மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் சார்பில் உசிலம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் புறநகர் மாவட்டத்  தலைவர் கே.தவமணி தலைமை வகித்தார். மாவட்டச்  செயலாளர் வி.முருகன், உசிலம்பட்டி ஒன்றியத் தலை வர் நாகராஜ், ஒன்றியச் செயலாளர் ஏ.சின்னச்சாமி, பொரு ளாளர் வீரையா, சேடபட்டி ஒன்றியச் செயலாளர் ராமர்  உள்பட பலர் பங்கேற்றனர்.

இறந்து கிடந்த தவளையால் விபரீதம் ஜிகர்தண்டா குடித்த  குழந்தைகள் பாதிப்பு

மதுரை, பிப்.6- மதுரை கோவலன் நகர் மணிமேகலை தெருவைச் சேர்ந்தவர் அன்புசெல்வம். இவரது மனைவி ஜானகிஸ்ரீ.  தைப்பூச விழாவை முன்னிட்டு (ஞாயிறு) இவர் தனது  மகள்கள் மித்ராஸ்ரீ (8), ரக்சஷனாஸ்ரீ(7) மற்றும் உற வினர் மகள் தாரணிஸ்ரீ (3) ஆகியோரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு அழைத்து வந்தார். அப்போது கோவில் அருகில் உள்ள ஒரு குளிர்பானக் கடையில்  குழந்தைகளுக்கு ஜிகர்தண்டா வாங்கிக் கொடுத்துள் ளார். அதனைக் குடித்த மூன்று குழந்தைகளும் வாந்தி  எடுத்தனர். இதனால் சந்தேகமடைந்த ஜானகிஸ்ரீ குழந்தை கள் குடித்த ஜிகர்தண்டாவை வாங்கிப் பார்த்துள்ளார். அப்போது அதில் போடப்பட்டிருந்த ஐஸ்கிரீமில் தவளை செத்துக் கிடந்துள்ளது. குழந்தைகள் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. ஐஸ்கிரீமில் தவளை கிடந்தது பற்றி ஜானகிஸ்ரீ திருப்ப ரங்குன்றம் காவல்துறையில் புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குளிர்பானக் கடையின் உரிமையாளர் துரைராஜன் (60) என்பவரைத் திங்களன்று கைது செய்தனர்.

மருத்துவமனைகளில் ஒப்பந்த முறையில் பணியாற்ற அழைப்பு

மதுரை, பிப்.6- மதுரையில் உள்ள நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலை யங்களுடன் இணைக்கப்பட்டுள்ள சுகாதாரம் மற்றும் நல வாழ்வு மையங்களில் ஒப்பந்த அடிப்படையிலான பல்வேறு பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வர வேற்கப்படுவதாகச் சுகாதாரப் பணிகள் துணை இயக்கு நர் கே.வி.அர்ஜுன்குமார் தெரிவித்துள்ளார். 40-வயதுக்குட்பட்ட ஆர்வமுள்ள விண்ணப்ப தாரர்கள் மருத்துவ அதிகாரிகள் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் பதவிகளுக்கு விண் ணப்பிக்கலாம், அதே நேரத்தில் 50 வயதுக்குட்பட்ட ஆண்கள் பல்நோக்குச் சுகாதாரப் பணியாளர்கள் பத விக்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பணியிலும் 46 காலியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 16-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பப் படிவங்களைத் தேவை யான ஆவணங்களுடன் நிர்வாகச் செயலர்/சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர், மதுரை மாவட்ட சுகா தாரச் சங்கம், விஸ்வநாதபுரம், மதுரை - 625 014 என்ற  முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0452 - 2640778 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளவும்.

நீர் நிலை எனக்கூறி இடித்த பகுதி ரியல் எஸ்டேட் ஆனது எப்படி மதுரை ஆட்சியரிடம் மக்கள் மனு

மதுரை, பிப்.6- நீர் நிலை எனக் கூறி வருவாய்த்துறையால் மீட்கப்பட்ட இடம் இப்போது ரியல் எஸ்டேட்-க்குப் பயன்படுகிறது. நீர் நிலைப் பகுதியில் குடியிருந்த மக்களுக்கு மாற்று இடம் வழங்கவேண்டுமென மதுரை ஆட்சியரிடம் பாதிக்  கப்பட்ட மக்கள் திங்களன்று மனு அளித்தனர். மதுரை-அழகர்கோவில் சாலையில் உள்ளது அப்பன்திருப்பதி. இங்குள்ள வெள்ளியங்குன்றம் ஊராட்சிக்குஉட்பட்ட கணேஷ் நகரில் பதினைந்து குடும்பங்கள் அரசுக்குச் சொந்தமான இடத்தில் குடியிருந்து வந்துள்ளனர். பதினைந்து குடும்பங்களின் வீடுகளையும் வருவாய்த்துறை “நீர்நிலை” எனக் காரணம்  காட்டி 2005-ஆம் ஆண்டு இடித்துள்ளனர். 18 ஆண்டு களுக்குப் பின் “நீர்நிலை” எனக் கூறப்பட்ட இடமும், அரு கிலுள்ள “அனதினம்” (ஏழைகளுக்குக் கொடுக்கக் கூடி யது) வருவாய்த்துறை பதிவிலுள்ள இடத்தையும் சேர்த்து  ரியல் எஸ்டேட் நடத்துபவர்கள் பயன்படுத்த தொடங்கி யுள்ளனர். “நீர்நிலை” எப்படி ரியல் எஸ்டேட்-டாக மாறி யது. மாவட்ட ஆட்சியர் கணேஷ் நகரில் குடியிருந்த மக்க ளுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் எனச் சிஐடியு மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் செ.கண்ணன், ப. முத்துராமன், எஸ்.நதியா, எம்.விஷ்ணுதேவி உள்ளிட்ட 15 பேர் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

வாலிபர் சங்கக் கூட்டம்

மதுரை, பிப்.6- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை மாந கர் மாவட்டக்குழுக் கூட்டம்  ஞாயிறன்று நடைபெற்றது. கூட்டத்தில்  மாவட்டத் தலைவராக அ.பாவெல் சிந்தன், பொருளாளராக ச.வேல்தேவா, துணைத் தலைவராக க.கௌதம் பாரதி, செயற்குழு உறுப்பினர்களாக மா. ஆறுமுகம், ஆர்.விக்னேஸ்வரன் ஆகியோர் தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ளனர்.  இந்தக் கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் மணிகண்டன் பங்கேற்றார்.

வைகை அணையிலிருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறப்பு நிறுத்தம்

தேனி, பிப்.6- வைகை அணையிலி ருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறப்பு திங்களன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது வைகை அணையிலி ருந்து முதல்போகப் பாச னம், ஒரு போகப் பாசனம்,  58 கிராமக் கால்வாய் பாச னம் ஆகியவற்றுக்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. மழைப்பொழிவு குறைந்த தால் அணையின் நீர்மட்டம் வேகமாகக் குறையத் தொடங்கியுள்ளது. திங்கட்  கிழமை காலை நிலவரப் படி அணையின் நீர்மட்டம் 54.07 அடியாக இருந்தது. அணைக்கு 748 கன அடி நீர்  வந்தது. ஞாயிறு வரை பாச னம் மற்றும் குடிநீருக்காக 769 கன அடி நீர் திறக்கப் பட்டது. கோடைக் காலம்  தொடங்க உள்ள நிலையில்  மக்களுக்குத் தடையின்றிக் குடிநீர் வழங்கத் தண்ணீரைச் சேமித்து அணையின் நீர்  மட்டத்தை உயர்த்த அதிகாரி கள் கண்காணித்து வருகின்ற னர். திங்கள் காலை முதல்  பாசனத்திற்கான தண்ணீர்  நிறுத்தப்பட்டுக் குடிநீருக் காக மட்டும் 69 கன அடி நீர்  திறக்கப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 126.15 அடியாக இருந்தது. 141 கன அடி நீர் வந்தது. அணையிலிருந்து 867 கன அடி நீர் வெளி யேற்றப்படுகிறது. மஞ்ச ளாறு அணையின் நீர்மட்டம்  47.95 அடியாக இருந்தது. 36 கன அடி நீர் வந்தது. 75 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணை யின் நீர்மட்டம் 91.84 அடி யாக இருந்தது. வரத்து இல்  லாத நிலையில் 25 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

2 “சி” பிரச்சனைக்குத் தீர்வு  காண்பாரா சிவகங்கை ஆட்சியர்?

சிவகங்கை, பிப்.6- பள்ளி-கல்லூரி மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு 2-”சி” பிரச்சனைக்கு சிவகங்கை ஆட்சியர் தீர்வு காணவேண்டும். காரைக்குடி தாலுகா, கல்லல் ஒன்றியத்திற்குட்பட்ட ஆத்தங்குடி கிராமத்தில் கண்ணாடிகள், பழைய மரக்கடைகள் அதைச் சார்ந்த உப தொழில்கள் நிறைந்த பகுதி. இங்குள்ள “ஆத்தங்குடி பெரிய வீட்டை” பார்க்க வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்ல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்களும் வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர். ஆத்தங்குடியில் உற்பத்தி செய்யப்படும் புதிய வீடுகளுக்குத் தேவையான பூக்கள், நிலை-கதவு, ஜன்னல்,அலமாரி,போன்ற சாமான்களை ஏற்றிச் செல்வதற்கு நாள்தோறும் ஏராளமான கனரக வாகனங்கள் வந்துசெல்கின்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க ஆத்தங்குடி-பலவான்குடி சாலை குண்டும்-குழியுமாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல ஏற்படுகிறது. இந்தச் சாலையை அகலப்படுத்த வேண்டும். கோனாபட்டு, ஆத்தங்குடி, பலவான்குடி, ஒ.சிறுவயல், போக்குவரத்து நகர், ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் காரைக்குடியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்குக் குறிப்பாகக் காலை நேரத்தில் 2-”சி” பேருந்து இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்து திடீரென நிறுத்தப்படுகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் ஐந்து நாட்கள் இந்தப் பேருந்து வரவில்லை. பேருந்து நிறுத்தப்பட்டால் மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. பேருந்துப் பிரச்சனையையும், சாலைப் பிரச்சனையையும் தீர்க்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டக்குழு உறுப்பினர் முருகேசன் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொதுப்போக்குவரத்துப் பாதுகாப்பை வலியுறுத்தல் அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் நடத்தும் மினி மாரத்தான்

பிப்.12-ஆம் தேதி காலை மதுரையில் நடைபெறுகிறது

மதுரை, பிப்.6- சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புதுப்போக்கு வரத்தைப் பாதுகாப்போம் என்ற கருப்  பொருளை முன்வைத்து அரசு போக்கு வரத்து மதுரை தொழிலாளர் சங்கம் (சிஐ டியு) மதுரையில் மாபெரும் மாரத்தான் போட்டியை நடத்துகிறது பிப்.12-ஆம் தேதி ஞாயிறு காலை  மாரத்தான் நடைபெறுகிறது. அனைவரும் பங்கேற்கும் பொதுப்பிரிவு மாரத்தான் போட்டியின் இலக்கு எட்டு கி.மீ. (திருநகரி லுள்ள சீதாலெட்சுமி மேல்நிலைப்பள்ளி யிலிருந்து மதுரை புறவழிச்சாலையில் உள்ள அரசு போக்குவரத்துத் தலைமை யகம் வரை). இந்தப் போட்டியை மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் துவக்கி வைக்கிறார். முறையே ரூ.10,000, ரூ.8,000, ரூ,5,000 பரிசும் நான்கு முதல் பத்து இடங்களைப் பிடிப்பவர்களுக்குத் தலா ரூ.1,000 பரிசாக வழங்கப்படும். பள்ளிக் கல்லூரி மாணவ-மாணவி களுக்கான மாரத்தான் போட்டியின் இலக்கு ஐந்து கி.மீ. (மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியிலிருந்து மதுரை புறவழிச்சாலை யில் உள்ள அரசு போக்குவரத்துத் தலை மையகம் வரை). இந்தப் போட்டியை திமுக மதுரை மாநகர் மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கோ.தளபதி துவக்கி வைக்கிறார். முறையே ரூ.6,000, ரூ.4,000, ரூ,2,000 பரிசும் நான்கு முதல் பத்து இடங்களைப் பிடிப்பவர்களுக்குத் தலா ரூ.500 பரிசாக வழங்கப்படும். மாணவ-மாணவிகள் படிப்புச் சான்றிதழ் (BONAFIED) கட்டாயம். முன்பதிவிற்குக் கடைசி நாள்: பிப்.8-ஆம் தேதி. பதிவு செய்யும் இடம்: அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்கம், வி.பி.சிந்தன் நினைவகம், வ.உ.சி. இரண்டாவது தெரு, அருள் நகர், புற வழிச்சாலை, மதுரை-625 016. இணையமுகவரி: tnstcmdu@gmail.com. மேலும் விபரங்களுக்கு:கைபேசி எண்கள்:9442704237,9994167219, 96009 17299, 9585508201.தொடர்பு கொள்ளலாம்.