districts

img

தார்ச்சாலை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை

கடமலைக்குண்டு, ஏப்.22- தேனி மாவட்டம் வருசநாடு அருகே சிங்கராஜ புரம் ஊராட்சி யில் கல்லுருண்டான் சுனை கிராமம் அமைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கல்லு ருண்டான்சுனை விலக்கில் இருந்து கல்லுருண்டான்சுனை கிராமம் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிய தார்ச் ்சாலை அமைக்கும் பணிகள் நடை பெற்றது. பெரும்பாலான பணி கள் முடிந்த நிலையில் சாலையில்  சுமார் 200 மீட்டர் தொலைவு வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பகு தியில் வருவதாக கூறி வனத் துறையினர் சாலை அமைக்கும் பணிகளுக்கு தடை விதித்தனர். ஒன்றிய மற்றும் மாவட்ட அதிகாரி கள் பல கட்ட பேச்சு வார்த்தை கள் நடத்தியும் தற்போது வரை அந்த பகுதியில் தார் சாலை அமைக்க வனத்துறையினர் அனுமதி வழங்கவில்லை. இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் விளைபொருட்களை மாட்டு வண்டிகளில் ஏற்றி கல்லுருண் டான்சுனை விலக்கு வரை கொண்டு வந்து அதன் பின்பு லாரிகள் மூலமாக தேனி, சின்ன மனூர் உள்ளிட்ட சந்தைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டிய நிலை உள்ளது. இதே போல சாலை வசதி இல்லாததால் பள்ளி மாணவ-மாணவிகள் நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் 5 கிலோ மீட்டர் தொலைவு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த சூழ்நிலையில் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு பெய்த கனமழை யின் காரணமாக தார்சாலை அமைக்கப்படாமல் இருந்த பகுதி அதிக அளவில் குண்டும் குழியுமாக மாறியது. இதனால் தற்போது மாட்டு வண்டிகளை கூட இயக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் வனத்துறை யினருடன் பேச்சுவார்த்தை நடத்தி கல்லுருண்டான்சுனை கிராமத்திற்கு தார்சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.