districts

காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவ.2-க்கு ஒத்திவைத்த நீதிமன்றம்

மதுரை, அக்.21- மதுரை மாவட்டம் உத்தபுரம் முத்தா லம்மன் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக உசிலம்பட்டி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவ.2-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை. ஏற்கனவே உத்தபுரம் முத்தாலம்மன் கோவில், மற்றும் அரசமரம் வழிபாட்டில் பட்டியலின மக்களுக்கும் உரிமை உண்டு  என்பதை ஏற்கனவே தமிழக அரசு தெளிவு படுத்திவிட்டது. பட்டியிலின மக்கள் வழி பாடு செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு தீண்டாமைஒழிப்பு முன்னணி-உத்தபுரம் பட்டியலின மக்க ளின் தொடர் முயற்சியால் தமிழக அரசின்  வழிகாட்டுதலுடன் அன்றைய மதுரை ஆட்சி யர் உ.சகாயம், அன்றைய காவல் கண்கா ணிப்பாளர் அஸ்ராகார்க் ஆகியோர் எடுத்த  நடவடிக்கையின் பலனாக உத்தபுரம் தலித்  மக்களுக்கு வழிபாட்டு உரிமை 2011-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கிடைத்தது. இந்த நிலையில், நிகழாண்டு அக்டோ பர் 24-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை  கோவில் திருவிழா நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. அதில், பேரையூர் அருகே உள்ள உத்தபுரம் அருள்மிகு முத்தாலம்மன் கோவிலில் அக்டோபர் 24-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை திருவிழா நடந்த திட்டமிட்டு விழாக் குழு தலைமையில் பணிகள் நடை பெற்று வருகிறது. கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு இரு சமூகத்திற்கு இடையே  ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கோவிலில்  திருவிழா நடைபெறவில்லை. மேலும் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் சிலர்,

கிராமத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்  சனை ஏற்படுத்தும் நோக்கில் செயல்  பட்டு, கோவிலில் திருவிழா வைக்கவிடா மல் செய்தனர். இதைத் தொடர்ந்து உயர்நீதி மன்றதில் வழக்குத் தொடரப்பட்டு சமரசம் செய்யப்பட்டது. சுமார் ஏழு ஆண்டுகள் பின்னர் இந்தாண்டு அக்டோபர் 24 முதல் 26 வரை முத்தாலம்மன் கோவிலில் திரு விழா நடந்த அனுமதி கோரி உயரதிகாரி களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவ டிக்கையும் இல்லை. உத்தபுரம் முத்தா லம்மன் கோவிலில் திருவிழா நடந்த அனு மதி அளித்து உத்தரவிட வேண்டும் என மனு வில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது  வழக்கு குறித்து உசிலம்பட்டி காவல்துறை  துணைக் கண்காணிப்பாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். நீதிமன்றம் செல்வதற்கு முன் நடந்தது என்ன ஒரு பிரிவினர் நீதிமன்றம் செல்வதற்கு முன், மக்கள் ஒற்றுமையைப் பேணுவதற்கு  வட்டாட்சியர், வருவாய்க் கோட்டாட்சியர், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் அனைத்து தரப்பினர் பங்கேற்ற கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப் பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள், “அனைத்து மக்களுக்கும் கோவிலில் சென்று வழிபடுவதற்கு உரிமையுள்ளது”  இது தான் அரசின் நிலை என்பதைத் தெளிவு படுத்தியுள்ளனர். மக்கள் ஒற்றுமை யாக, சகோதரர்களாக இருக்க வேண்டு மெனவும் வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.