districts

img

விருதுநகரில் ஒரே நாளில் 1000 மரக்கன்றுகள் நடும் பணி ஆட்சியர் துவக்கி வைத்தார்

விருதுநகர், ஜூன்.3- விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு வனத்துறை மூலம் ஒரே நாளில் 1000 மரக் கன்றுகள் நடும் பணி யை மாவட்ட ஆட்சியர் ஜெ. மேகநாதரெட்டி தொடங்கி வைத்தார். தமிழக வனத்துறை மற்றும் தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் கீழ்  விருதுநகர், சிவகாசி, திருவில்லிபுத்தூர்,  இராஜபாளையம் உள்ளிட்ட வன சரகத்திற்குட்பட்ட விவசாய நிலங்கள், பட்டா நிலங்கள், பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலை வளாகங்களில் 4 இலட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வடகிழக்கு பருவமழை பொழிவு காலங்க ளான அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய காலங்களில் தேக்கு, வேம்பு, சிவப்பு சந்த னம், வேம்பு, சவுக்கு ஆகிய மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாளையொட்டி  ஒரே நாளில் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மங்களராம சுப்ரமணியன்,  திட்ட இயக்கு நர்  திலகவதி,   வன அலுவலர் ராஜ்குமார், வன  அலுவலர் கள்  ஞானப்பழம், அன்னக் கொடி  உட்பட  பலர் கலந்து கொண்டனர்.