சென்னை,ஜன.10- தமிழ்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த 36 லட்சம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் மொத்த பாதிப்புகளில் 50 விழுக்காடு சென்னையை சேர்ந்தவர்கள் என்பது கவலை தருவதாக மாறியுள்ளது. இவர்களில் 85 விழுக்காடு பேருக்கு ஒமைக்ரான் காரணமாகவே கொரோனா தாக்கம் உருவாகி இருப்பதாக கண்ட றியப்பட்டுள்ளது. எனவே தமிழ கத்தில் கொரோனா தடுப்பு நட வடிக்கை களை தீவிரப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில், 3-வது தவணை முன்னெச்சரிக்கை பூஸ்டர் தடுப்பூசி செலுத்த ஒன்றிய அரசு உத்தரவிட்டு ள்ளது. 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 9 மாத இடைவெளிக்கு பிறகு 3-வது தவணை பூஸ்டர் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி யிருக்கிறது. அதாவது கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு முன்பாகவே 2 தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்ட தகுதியான நபர்கள் 3-வது தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 36 லட்சம் பேருக்கும் 3-வது தவணை பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை ஜன.10 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி சென்னை பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி. நகரில் நடைபெற்றது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்குவதற்கு அடையாளமாக 15 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், முதியவர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், த.மோ.அன்பரசன், பி.கே. சேகர்பாபு, சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனையடுத்து, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், முன்களப் பணியாளர்கள் தங்கு, தடையின்றி 3-வது தவணை தடுப்பூசி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்து வமனைகள், தங்கள் மருத்துவமனை ஊழியர்களுக்கு தாங்களே பூஸ்டர் தடுப்பூசி வழங்குமாறு அறிவுறுத்தப்ப ட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தயங்காமல் 3-வது தவணை பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் தங்களை தற்காத்துக் கொள்ள முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். உடல்நல பாதிப்புகள், இணை நோய்கள் இருந்தால் மருத்து வர்கள் ஆலோசனையை பெற்றுக் கொள்ளலாம்.