மறைந்த பழம்பெரும் திரையிசைப் பாடகர் பத்மஸ்ரீ டி.எம். சௌந்தரராஜன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை கிழக்கு மண்டல அலுவலகத்தில் அவருக்கு வெண்கலச் சிலை நிறுவப்பட்டது. அச்சிலையை புதனன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார் .இதில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மு.பெ. சாமிநாதன், பி. மூர்த்தி, தங்கம் தென்னரசு, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ. தளபதி, மு. பூமிநாதன், மாநகராட்சி மேயர் வ. இந்திராணி துணை மேயர் நாகராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.