districts

img

சிவகங்கையில் பள்ளி கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்

சிவகங்கை, மே 5-  சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி வகுப்ப றைக் கட்டிடங்களை காணொலிக் காட்சி வழியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.  திருப்புவனம் அரசு மகளிர் மேல்நிலைப்  பள்ளியில் ரூ.57.42 லட்சம் மதிப்பிலும், கீழடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.350 4.65 லட்சம் மதிப்பிலும், கிருங்காக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.237.10 லட்சம் மதிப்பிலும், கோவிலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.20. 57 லட்சம் மதிப்பிலும், டி.புதுப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.29.6 14 லட்சம் மதிப்பிலும் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை தமிழக முதல்வர் காணொலி மூலமாக திறந்து வைத்தார்.  விழாவில் மாவட்ட ஆட்சியர் மதுசூத னன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் திருப்புவனம் பேரூ ராட்சி தலைவர் சேங்கை மாறன், திருப்பு வனம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சின்னையா, மாவட்ட முதன்மை கல்வி அலு வலர் மணிவண்ணன், சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் முத்துசாமி, ஒன்றிய கவுன்சிலர் வைத்தீஸ்வரி ஆறுமுகம், கீழடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கட சுப்ரமணி யன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.