மதுரை, மார்ச் 25- மதுரையில் 166 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் நீதிமன்ற கட்டடங்கள் கட்டுவதற்கு உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி டாக்டர் டி.ஒய். சந்திரசூட் அடிக்கல் நாட்டி னார். சனிக்கிழமையன்று நடை பெற்ற விழாவுக்கு தமிழ்நாடு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் னிலை வகித்தார். மேலும் முதலமைச்சர், மயி லாடுதுறையில் அமைக்கப் பட்டுள்ள மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தை திறந்து வைத்தார். ஒன்றிய சட்டம்- நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மயி லாடுதுறையில் அமைக்கப்பட் டுள்ள முதன்மை குற்றவியல் நடு வர் நீதிமன்றத்தை திறந்து வைத் தார். மதுரை மாவட்ட நீதிமன்ற வளா கத்தில் கட்டப்படவுள்ள கூடுதல் நீதி மன்ற கட்டடங்களில் அடித்தளம், தரைத்தளம் மற்றும் மூன்று தளங்க ளுடன் மொத்தம் 3,38,968 சதுர அடி பரப்பளவில் கட்டப்படவுள்ளன. நீதிமன்ற கட்டடத்தின் அடித் தளத்தில் வாகன நிறுத்துமிடங்கள், தரைத்தளத்தில் நீதிபதி மற்றும் பொதுமக்கள் நுழைவுவாயில்கள், மருந்தகம், வங்கி, அஞ்சலகம், முதல் தளத்தில் நீதிமன்ற அரங்கு கள், தலைமை நிர்வாக அலுவலர் மற்றும் மேலாளர் அறை, சாட்சிகள் அறை மற்றும் குழந்தைகள் காப் பறை, இரண்டாம் மற்றும் மூன்றாம் தளங்களில் நீதிமன்ற அரங்குகள்,
வழக்கறிஞர்கள் அறைகள், சட்ட உதவி அறைகள், காணொலி கூட்ட அரங்கு, பதிவுருக்கள் அறைகள் ஆகியவை கட்டப்படவுள்ளன. மேலும், மின்தூக்கிகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், மாற்றுத்திற னாளிகளுக்கான சாய்வு நடை பாதை வசதிகள், தானியங்கி தீய ணைப்பு வசதிகள் போன்ற வசதி களும் ஏற்படுத்தப்படும். இந்த விழாவில் உச்சநீதி மன்ற நீதிபதிகள் வி. ராமசுப்பிர மணியன், எம்.எம். சுந்தரேஷ், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) டி. ராஜா, உயர்நீதிமன்ற நீதிபதி மகா தேவன், சட்டத் துறை அமைச்சர் எஸ். இரகுபதி, அமைச்சர்கள் இ. பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.ஆர். பெரியகருப்பன், ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், பி.மூர்த்தி, பி. டி. ஆர். பழனிவேல் தியாக ராஜன், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், துணை மேயர் தி.நாகராஜன், நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ. தளபதி, மு. பூமிநாதன், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க. பணீந்திர ரெட்டி, மதுரை மாவட்ட ஆட்சியர் மரு. எஸ். அனீஷ் சேகர், அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம், சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதி வாளர் பி. தனபால் வழக்கறி ஞர்கள் மற்றும் அரசு உயர் அலு வலர்கள் கலந்து கொண்டனர்.