தேனி, பிப்.9- ஆண்டிபட்டி அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ள திப்புசுல்தான் காலத்து பீரங்கிக்கல்லை பொது மக்கள் ஏராளமா னோர் கண்டுகளித்தனர். தேனி மாவட்டம்ஆண்டிபட்டி அரசு அருங்காட்சியகத்தில் மாதந்தோறும் ஓர் அரிய பொருள் கண்காட்சியாக வைக்கப் பட்டு வருகிறது. இதன்படி திப்புசுல்தான் காலத்து பீரங்கிக்கல் குண்டு இம்மாதம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. கல்குண்டு என்பது வெடிமருந்து இல்லா மல் பீரங்கியில் இருந்து ஏவப்படுவதாகும். ஆங்கிலேயர் இதன் மூலம் கோட்டையின் கதவுகள், எதிரியின் மதில் சுவர் போன்ற வற்றை சேதப்படுத்தி உள்ளனர். இது குறித்து அருங்காட்சியக காப்பாட்சி யர் சே.கிருஷ்ணம்மாள் கூறுகையில், இந்த கல்குண்டானது போடி அருகே கோம்பைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. மாவட்ட வரலாற்று ஆய்வு மையத் தலைவர் பஞ்சுராஜா இதனை அருங்காட்சியகத்திற்கு அன்பளிப்பாக அளித்துள்ளார். இதன் எடை 1.5கிலோ. 1790-ல் திப்பு சுல்தானுக்கும், ஆங்கிலேயருக்கும் நடந்த சண்டையில் ஆங்கிலேயர் இதனை பயன்படுத்தி உள்ள னர். இதற்குப் பின்புள்ள காலத்தில் வெடி மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.