தூத்துக்குடி, மே 19- தூத்துக்குடி ராஜீவ் நகர் பகுதியில் ஓடை நீர் கால்வாய் தடுப்புச் சுவரை உயர்த்த வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் சார்பில் மாநகராட்சி தெற்கு மண்டல உதவி ஆணை யர் ராமச்சந்திரனிடம் அளித்துள்ள மனு: தூத்துக்குடி மாநகராட்சி 58 வார்டுக்கு உட்பட்ட பகுதி ராஜீவ் நகரில் ஓடை நீர் வாய்க்கால் கரை புதிதாக அமைக்கப்பட் டது. இதில் தடுப்புச்சுவர் அமைக்காததால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதில் தடுமாறி விழுந்து அடிக்கடி விபத் துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. எனவே, வாய்க்காலில் தடுப்பு சுவரை இருபுறமும் உயரமாக அமைக்க வேண்டும். ராஜீவ் நகர் பிரதான நகர் பிரதான சாலை யில் விபத்து அடிக்கடி நடைபெறுவதால் அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட குழு உறுப்பி னர் ஜான்சன், புறநகர் செயலாளர் உதய குமார், புறநகர் தலைவர் விக்கி ராஜிவ் நகர் கிளை தலைவர் கண்ணன், செயலாளர் நேசமணி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.