districts

img

சிவகங்கையில் தொடங்கியது புத்தகத் திருவிழா

சிவகங்கை, ஏப்.15- சிவகங்கையில்  புத்தகக் கண் காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.  சிவகங்கை மன்னர் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட நிர்வாகமும் பபாசிஅமைப்பும் இணைந்து நடத்தும் புத்தகக் கண் காட்சியை சுகாதாரத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தனர். நிகழ் விற்கு மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி தலைமை வைத்தார்.  குன்றக்குடி பொன்னம்பல அடி களார், சிவகங்கை மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் செந்தில் குமார், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, சிவ கங்கை நகர்மன்ற மன்றத் தலைவர் துரை ஆனந்த், திருப்புவனம் பேரூ ராட்சித் தலைவர் சேங்கைமாறன், மானாமதுரை நகர் மன்றத் தலை வர் மாரியப்பன் கென்னடி, தென் னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் செயலா ளர்கள் எஸ்.வைரவன், எஸ்.கே.முருகன் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜபூபதி நிகழ்வை ஒருங்கி ணைத்தார்.