districts

img

விபத்தில் பலியான தலைமைக்காவலர் உடல் காவல்துறை மரியாதையுடன் அடக்கம்

தேனி, ஆக.1- பாளையம் அருகே ஆம்னி பேருந்து மோதிய தில் உடல் கருகி பலியான தலைமை காவலர் உடல் காவல்துறையினர் முழு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. சின்னமனூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்தவர் ராமகிருஷ்ணன்(வயது 40). பைக்கில் வந்த இவரும் உத்தமபாளையம் அடுத்த துர்கையம்மன் கோவில் அருகே நேற்று முன்தினம் இரவு கம்பத்தில் இருந்து  பெங்களூரு நோக்கி சென்ற  ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். இதில் பைக்குடன் பேருந்  தின் அடியில் ராமகிருஷ் ணன் சிக்கினார். பைக்கில் தீப்பற்றி ராமகிருஷ்ணன் மீது பரவியது. இதில் உடல் கருகி சம்பவஇடத்திலேயே பலியானார். இதையடுத்து அவரது  உடலை சின்னமனூர் போலீ சார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கா.விலக்கு அரசு  மருத்துவகல்லூரி மருத்துவ னைக்கு கொண்டு சென்ற னர். செவ்வாய்க்கிழமை காலை ராமகிருஷ்ணன் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு சொந்த ஊரான கம்பம் மாலையம்மாள் புரத்திற்கு கொண்டு வரப்பட்டது.அங்கு உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுகுமாரி,கம்பம் எம்.எல்.ஏ இராமகிருஷ்ணன் மற்றும் உறவினர்கள் போலீ சார் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து காமய கவுண்டன்பட்டி சாலை யில் உள்ள முல்லைப்பெரி யாற்றில் தகனம் செய்யப் பட்டது.முன்னதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிர வீன் உமேஷ் டோங்கரே தலைமையில் போலீசார் 21 குண்டுகள் முழங்க மரி யாதை செலுத்தப்பட்டது.