districts

img

மோடிக்கு எதிரான சரியான கண்டன அறிக்கை திருக்குறள்!

மதுரை, ஏப்.10- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடை பெற்ற எழுத்தாளர், படைப்பாளிகளின் கூடுகை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:

கடந்த 10 வருடங்களில் மக்களுக்காக என்ன செய்தோம் என்று சொல்லிக் கொள்ள பாஜகவினரிடம் ஒன்றுமே இல்லை. அதனால் ராமர் கோவிலுக்குள் ஓடி ஒளிந்துகொள்கின்றனர். வட மாநி லங்கள் முழுவதும் பெரும்பான்மைவாதம் தீவிரமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. மத வாதத்தோடு, பெரு நிறுவனங்களும் கூட்டு சேர்ந்துள்ளதால் பணபலமும் ஊடக பல மும் அவர்களுக்கு எளிதாகக் கிடைக்கிறது. இதனால், பொய்களை உண்மைபோல அவர்களால் கட்டமைக்க முடிகிறது. மதவெறி என்கிற போதை அவர்களுக்கு பெருமளவுக்கு உதவுகிறது. 

மோடி தமிழ்நாட்டுக்கு வரும்போதெல் லாம் திருக்குறளைப் பற்றி பேசுகிறார். திருக்குறளில் 25 அதிகாரங்கள் அர சியலைப் பேசுகின்றன. அறம் பிறழாமல் ஆட்சி செய்வதைப் பற்றி வள்ளுவரைப் போல, வேறு யாரும் சொல்லிவிட முடி யாது. அப்படிப் பார்த்தால் மோடிக்கு எதி ரான சரியான கண்டன அறிக்கை திருக்குறள்தான். 

மிகவும் கொடூரமான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எல்லா இடங்களிலும் ஆர்எஸ்எஸ், பாஜக அட்டூழியம் வளர்ந்து கொண்டு இருக் கிறது. எல்லா இடங்களிலும் நச்சு விதை களை அது விதைத்துக் கொண்டிருக் கிறது. இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு சமூகத்தில் ஒரு படைப்பாளன் சும்மா இருக்க முடியுமா? 

எங்களைப் போல கட்சி சார்ந்தவர் களும், அமைப்புகளைச் சார்ந்தவர்கள் மட்டுமே இக்கொடுமைகளுக்கு எதிராகப் பேசிக் கொண்டு இருக்கிறோம். இதைப் பற்றியெல்லாம் சில எழுத்தாளர்கள் பேச மறுக்கின்றனர். எழுத மறுக்கின்றனர்.

பொதுவானவர்கள் என்ற பிம்பத்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை. தயவு செய்து பேசுங்கள். இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாம் பேசுவதற்கான கடைசி வாய்ப்பும் பறிக்கப்பட்டு விடும். இருண்ட காலத்தைப் பற்றி உங்கள் குரலைப் பதிவு செய்யுங்கள். வரலாற்றில் மீண்டும் நாம் தோற்கடிக்கப்பட்டோம் என்றால், அதில் மவுனமாக இருந்த வர்களின் பங்கும் இருக்கிறது. 

ஜனநாயகத்திற்கான குரலை,  எழுத்திலும் பேச்சிலும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருபவர் சு.வெங்க டேசன். கடந்த 5 ஆண்டுகளில் நாடாளு மன்றத்தில் அவர் ஆற்றிய பங்கு மகத்தானவை. ஒட்டுமொத்த இந்தியா வுக்குமான வேட்பாளராக சு.வெங்கடேசன் மதுரை மண்ணில் நிற்கிறார். அவரை வெற்றி பெறச் செய்வது உங்கள் கடமை. இவ்வாறு அவர் பேசினார்.