districts

img

தேக்கடியில் 15 ஆவது மலர் கண்காட்சி தொடங்கியது

தேனி, ஏப்.1- புகழ்பெற்ற தேக்கடி 15 ஆவது மலர்  கண்காட்சி தேக்கடியில் சனிக்கிழ மையன்று தொடங்கியது. தேக்கடி வேளாண் தோட்டக்கலை சங்கம், குமுளி பஞ்சாயத்து நிர்வாகம்,  மன்னாரத்தரை கார்டன் இணைந்து 15 ஆவது மலர் கண்காட்சி குமுளி  சாலையில் உள்ள கல்லறைக்கல் மைதானத்தில் ஏப்ரல் 1 சனிக்கிழமை யன்று தொடங்கியது.  மலர் கண்காட்சியை குமுளி ஊராட்சி தலைவர் சாந்தி ஜெசிமோன்  தொடக்கி வைத்தார் .30 நாட்கள் கண்  காட்சி  நடைபெறுகிறது. மலர் கண் காட்சியில் பல்லாயிரக்கணக்கான மலர்கள், நூற்றுக்கணக்கான மருத்துவ மூலிகைச் செடிகள், அலங்காரச் செடி கள், தோட்டச் செடிகள், சமையலறை தோட்டம் அமைக்க தேவையான செடி,  நாற்றுகள் அனைத்தும் பார்வையா ளர்களை கவரும் வகையில் இடம் பெற்  றுள்ளன. வேளாண் குறித்த கருத்த ரங்கம், விவசாயம் குறித்த சந்தேகங் கள் மற்றும் பார்வையாளர்களுக்கான மலர் அலங்காரப் போட்டிகள், சமை யல் போட்டி, குழந்தைகளுக்காக விளையாட்டரங்கம், கண்காட்சி, வீட்டு வளர்ப்பு விலங்குகளின் கண்காட்சி யும், இயற்கை காய்கறி, மழைநீர் சேகரிப்பு, பெண்கள் பாதுகாப்பு குறித்த  கருத்தரங்கம் நடைபெறுகிறது.  பீர்மேடு சட்டமன்ற உறுப்பினர் வாழூர் சோமன் தலைமையில் ஞாயி றன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கேரள வேளாண்மைத் துறை அமைச் சர் பிரசாது கலந்து கொள்கிறார்.