மதுரை மாநகராட்சி 23 ஆவது வார்டில் வெற்றிபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் டி. குமரவேல் புதனன்று பாக்கியநாதபுரம், தாகூர்நகர் ஆகிய பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார் .இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜா. நரசிம்மன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் பா. பழனியம்மாள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி. ராதா, ஏ. பாலு, வடக்கு - 1 ஆம் பகுதிக்குழு உறுப்பினர் வி. கோட்டைச்சாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
மதுரை மாநகராட்சி 56 ஆவது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வை. ஜென்னியம்மாள் புதனன்று அழகரடி, மேலப்பொன்னகரம் மெயின்ரோடு உள்ளிட்ட வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து திமுக பகுதிச் செயலாளர் தவமணி தலைமையில் நன்றி தெரிவித்தார். இதில் சிபிஎம் மத்திய - 1 ஆம் பகுதிகுழுச் செயலாளர் வை. ஸ்டாலின், மாவட்டக்குழு உறுப்பினர் ஏ. பாண்டி , மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.