தென்காசி, அக்.26- தென்காசி செயற் பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடுமின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியூ) சார்பில், பட்டமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்வாரியம் தனியார்மயம் ஆவதை கன்டித்தும், காலி இடங்களை நிரப்புவது, ஒப்பந்த, பகுதிநேர பணியாளர்கள் நிரந்தரம் ஆக்குவது, தேவையான உபகரணங்கள் வழங்குவது, தொழிலாளர்களுக்கு பணப்பயன்களை விரைவாக வழங்குவது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் கணேசன், இராஜசேகரன், ஆயூப்கான், சேவியர் அந்தோனி, மணிகண்டன் ஆகியோர் பேசினர். இளையராஜா நன்றி கூறினார்.