தேனி, மார்ச் 17- பணி பாதுகாப்பு கேட்டு உயர் நிலை, மேல்நிலைப்பள்ளி பட்ட தாரி ஆசிரியர்கள் தேனி முதன்மை கல்வி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தேவதானப்பட்டியில் பள்ளி மாணவனை கண்டித்த ஆசி ரியரை தொடர்ந்து ஆயுதங்களை கொண்டு கொலை மிரட்டல் செய் வது, தேவாரத்தில் கண்டித்த ஆசி ரியரை மாணவன் தாக்கியது ,ஜி. கல்லுப்பட்டியில் மாணவர்கள் குழுவாக சேர்ந்து ஆசிரியை களை கேலி செய்வது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வரு வதால் ஆசிரியர்களுக்கு பாது காப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ள தாக கூறி தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட செய லாளர் மோகன் தலைமையில் தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் வியா ழனன்று மாலையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் னர் முதன்மை கல்வி அலுவலர் செந்தில்வேல் முருகனிடம் புகார் அளித்தனர்.