தூத்துக்குடி.நவ.30- தூத்துக்குடியில் டாஸ்மாக் சுமைப் பணித் தொழிலாளா்கள் கூலி உயா்வு கோரி நவம்பர் 29 முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். மதுபான உற்பத்தி ஆலைகளில் இருந்து லாரிகளில் வரும் மதுபான பெட்டிகளை கிட்டங்கியில் இறக்கி வைக்கும் பணிக்கான கூலியை ரூ.8ஆக உயா்த்தி வழங்கக் கோரி சுமைப் பணி தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இரண்டாவது நாளாக ஈடுபட்டுள்ளனா். இதனால் மதுபானங்களுடன் லாரிகள் சிப்காட் டாஸ்மாக் கிட்டங்கி யில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வேலைநிறுத்தம் தொடரும் என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர்.