தமுஎகச மாவட்ட மாநாடு புதிய நிர்வாகிகள் தேர்வு
தூத்துக்குடி, ஜூன் 26- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க தூத்துக்குடி மாவட்ட மாநாடு எட்டையபுரம் பகுதி யில் நடைபெற்றது.இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவராக ராமசுப்பு, மாவட்ட செயலாள ராக சங்கரலிங்கம் ,மாவட்ட பொருளாளராக மணிமொழி நங்கை உட்பட 32 பேர் கொண்ட புதிய மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியாக பட்டத்து விநாய கர் கோவில் திடலில் மாலை நேர மக்கள் ஒற்றுமை கலை மாலை நிகழ்ச்சி நடைபெற்றது. திருவில்லிபுத்தூர் புயல் தப்பாட்ட குழுவினரின் தப்பாட்டம். முத்துச்சிப்பி தாமோதரன் கலைக்குழு வினரின் மக்கள் இசை பாடல்களும் நடைபெற்றது. அத னைத் தொடர்ந்து திரைப்படங்கள் சமூகத்தில் நல்ல மாற்றங்களை விளைவிக்கின்றன என்பது குற்றம் என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் நடுவர் பேராசிரியர் சங்கர லிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆசிரியர் நம் சீனிவாசன், கவிஞர் தேவி ஆகியோர் வழக்காடினர்.
மின் நிலைய அதிகாரி கொலை வழக்கில் 2 பேர் கைது
தூத்துக்குடி, ஜூன் 26- நாசரேத் துனைமின் நிலைய அதிகாரி கொலை வழக்கில் இளம் சிறார் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். நெல்லை கே.டி.சி, நகரைச் சேர்ந்தவர் பூவையா. இவரது மகன் ஆனந்தபாண்டி (51). இவர் தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தில் உள்ள துணை மின் நிலை யத்தில் லைன் இன்ஸ்பெக்டராக வேலைபார்த்து வந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பணியில் இருந்த அவர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதுகுறித்து நாசரேத் காவல் நிலைய ஆய்வாளர் பட்டாணி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த கொலை தொடர்பாக எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், சாத்தான்குளம் டிஎஸ்பி அருள் தலைமையில் 4 தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் கொலை தொடர்பாக குறிப்பன்குளம் கிராமத்தை 17 வயது இளம் சிறார் ஒரு வரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கொடுத்த பரபரப்பான வாக்கு மூலம் வருமாறு: எனது தந்தை ராஜா நாசரேத் மின் நிலையத்தில் லைன் மேன் ஆக வேலை பார்த்து வந்தார் அவருக்கு பகலில் டூட்டி கொடுக்காமல் இரவில் டூட்டி கொடுத்தனர் அதற்கு முழு காரணம் ஆனந்த பாண்டி. இதனால் எனது தந்தை கடந்த ஆண்டு இரவு நேர பணியில் இருந்த போது மின்கம்பத்தில் ஏறி வேலை பார்த்த போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக செத்தார். இதன் காரணமாக ஆனந்த பாண்டியை கொலை செய்ய கடந்த ஓராண்டு காலமாக முடிவு செய்தேன். அதன்படி எனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து கடந்த 22ஆம் தேதி பணியில் இருந்த ஆனந்த பாண்டியை சரமாரி யாக அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு 5பேரும் தப்பி ஓடி விட்டோம்என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாசரேத் சர்ச் தெருவை சேர்ந்த ரெனால்ட் மகன் ரூஸ்வெல்ட் பேட்ரிக் (18) என்பவரை போலீ சார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள். இந்த கொலை வழக்கு கடந்த ஒரு வார காலமாக துப்பு துலங்காமல் இருந்த இந்தநிலையில், திறமையாக விசா ரணை நடத்தி குற்றவாளி 2 பேரை கைது செய்த போலீசாரை மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் பாராட்டினார்.
குமரியை பசுமை மாவட்டமாக மாற்றுவது குறித்த கலந்தாய்வு
நாகர்கோவில், ஜூன் 26- கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தினை பசுமை மாவட்டமாக மாற்றுவது குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு நடைபெற்றது தமிழ்நாடு அரசு மற்றும் அமைச்சர் மனோ தங்க ராஜ் அறிவுறுதலின் படி கன்னியாகுமரி மாவட்டத்தினை பசுமை மாவட்டமாக மாற்றுவதற்கான ஆக்கப்பூர்வமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக, நெகிழி இல்லா மாவட்டமாக மாற்றுவது, நீர்நிலைகளை தூர்வாருவது, சுற்றுலா தலங்களை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்பு பணிகள் நடைபெற்று வருவது குறித்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் மா. அரவிந்த் கலந்தா லோசனை மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலர் மு. இளையராஜா மாவட்ட வருவாய் அலுவலர் தேசிய நெடுஞ்சாலை (நிலமெடுப்பு) இரா. ரேவதி, திட்ட இயக்குநர்கள் ச. சா. தனபதி (ஊரக வளர்ச்சி முகமை), மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ (மகளிர் திட்டம்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஜூலை 5ல் திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம்
திருநெல்வேலி, ஜூன் 26- நெல்லை மாவட்டத்தில் வசித்து வரும் திருநங்கை களுக்கு மாநில அரசின் மூலம் வழங்கப்பட்டு வரும் நலத் திட்டங்கள் சென்றடையும் நோக்கில் திருநங்கைகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமை யில் வருகிற 5-ந் தேதி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் நடத்தப்பட உள்ளது. எனவே நெல்லை மாவட்டத்தில் வசித்து வரும் திருநங்கைகள் அனைவரும் காலை 11 மணிக்கு தவறாது கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் 4,665 வழக்குகள் விசாரணை
திருநெல்வேலி, ஜூன் 26- மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின் பேரில் இந்த ஆண்டின் 2-வது தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை உள்பட 9 தாலுகாக் களில் சட்டப் பணிகள் ஆணை குழுக்களால் 25 பேர் கொண்ட அமர்வுகளுடன் மக்கள் நீதிமன்றம் ஞாயிறன்று நடை பெற்றது. நெல்லை மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட நீதிபதியும், நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான குமர குரு தலைமையில் நடைபெற்றது. இதில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா, 2-வது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மநாபன் மற்றும் நீதிபதிகள் பன்னீர்செல்வம், தீபா, கும ரேசன், விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்கு கள், உரிமையியல் வழக்குகள், காசோலை மோசடி வழக்கு கள், சமரசமாக முடியக்கூடிய குற்ற வழக்குகள் உள்பட மொத்தம் 4 ஆயிரத்து 665 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதேபோல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத சுமார் 2000 வங்கி கடன் வழக்கு கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து பல்வேறு விபத்து வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டு அவர் களுக்கு நிவாரணமாக காசோலைகள் வழங்கப்பட்டது.
நெல்லையில் மேலும் 38 பேருக்கு கொரோனா
திருநெல்வேலி, ஜூன் 26- நெல்லை மாவட்டத்தில் சனிக்கிழமை 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் ஞாயிற்று கிழமை புதிதாக 38 பேருக்கு தொற்று கண்டறி யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மாநகர பகுதியில் 17 பேர் பாதிக் கப்பட்டுள்ளனர். அம்பை, பாளை, ராதாபுரத்தில் தலா 4 பேர், நாங்குநேரியில் 3 பேர், களக்காடு, சேரன்மகாதேவியில் தலா 2 பேர், மானூர், பாப்பாக்குடியில் தலா ஒருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட வர்களில் பெரும்பாலானோர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.