districts

img

தாமிரபரணி, நம்பியாறு- கருமேனி இணைப்புத் திட்டம் : பாலம் கட்டும் பணியில் காலதாமதம் ஏற்பட்டால் கடும் நடவடிக்கை

திருநெல்வேலி, பிப்.26- தாமிரபரணி, நம்பியாறு- கருமேனி ஆறு இணைப்புத் திட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பாலம் கட்டும் பணியில் காலதாமதம் ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை விடுத்துள்ளார். நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவி அருகே உள்ள கன்ன டியன் கால்வாயில் இருந்து திசையன்விளை அருகே உள்ள எம்.எல். தேரி வரை தாமிரபரணி ஆறு, கருமேனியாறு, நம்பி யாறு இணைப்பு திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.  இந்த பணிகள் நடைபெறும் மூன்றடைப்பு அருகே உள்ள நான்குவழிச்சாலை பாலம் கட்டும் பணியை சபாநாயகர் அப்பாவு மற்றும் திட்ட இயக்கு நர் நாகராஜன் ஆகியோர் சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டனர்.  பின்னர் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் கூறியதாவது:  இந்தத் திட்டம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கனவுத்திட்டம். எனவே இந்த திட்டத்தை திமுக அரசு மிக விரைவாக செய்து முடிக்க அனைத்து நடவடிக்கைகளை யும் எடுத்து வருகிறது. கன்ன டியன் கால்வாயில் இருந்து திசை யன்விளை அருகே உள்ள எம்.எல்.தேரி வரை 75 கிலோ மீட்டர் நீளத்திற்கு இந்த வெள்ள நீர் கால்வாய் திட்டம் செயல்படுத் தப்படுகிறது.  நெல்லை மாவட்டத்தில் 67 கிலோ மீட்டரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 8 கிலோ மீட்டரும் கால்வாய் வெட்டப்படுகிறது. ரூ. 933 கோடி செலவில்இந்த கால்வாய் வெட்டும் பணி நடை பெற்று இறுதிக் கட்டத்தை அடைந்து உள்ளது. இதன் மூலம் நெல்லை மாவட்டத்தில் 32 கிராமங்கள், 177 குளங்கள் 2,657 கிணறுகள் நெல்லை மாவட்டத் தில் பயன்பெறும்.தூத்துக்குடி மாவட்டத்தில்  18 கிராமங்கள், 75 குளங்கள், 2,563 கிணறுகள் பயன்பெறும்.  இதன் மூலம் 17 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும்.இந்த கால்வாய்க்காக நான்கு வழி சாலை பகுதியில் ரூ.17 கோடியில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் பாலம் கட்டும் பணி தொடங்கி யது. இதுவரை 20 சதவீத பணிகள் மட்டுமே நிறைவ டைந்து உள்ளது.  மிகவும் காலதாமதமாக இந்த பணிகள் நடைபெற்று வரு கிறது. வருகிற அக்டோபர் மாதத்திற்குள் பணிகள் முடி வடைந்து மழை காலத்திற்குள் வெள்ளநீர் கால்வாயில் தண்ணீர் தேங்க நடவடிக்கை எடுக்கப் படும். இந்த பணியை விரைவு படுத்த அதிகாரிகளுக்கு உத்தர விட்டு உள்ளேன். பணிகள் விரைவு படுத்தாமல் காலதாம தம் ஆனால், ஒப்பந்ததாரர் மீது  நடவடிக்கை எடுக்கவும் உத்தர விடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.