தியாகி சங்கரலிங்கனார் நினைவாக தமிழ்நாடு மாநில அமைப்பு தினம் மற்றும் தமிழ் வளர்ச்சியை முன்னெடுப்போம் என்ற சிறப்பு கருத்தரங்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மேற்கு - 2 ஆம் பகுதிக்குழு சார்பில் ஜெய்ஹிந்த்புரம் அண்ணாமலை மண்டபத்தில் பகுதிக்குழு செயலாளர் ஏ. எஸ். செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகரட்சி துணை மேயர் தி.நாகராஜன் வரவேற்று பேசினார். தமுஎகச மாநில துணைப் பொதுச்செயலாளர் அ.லட்சுமி காந்தன் கருத்தரங்கில் சிறப்புரையாற்றினார். கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன் ஆகியோர் உரையாற்றினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். பாலசுப்பிரமணியம் , ஆர். சசிகலா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.