திருநெல்வேலி ,நவ. 23- மின்சார சட்ட திருத்த மசோதாவை ஒன்றய அரசு திரும்ப பெற வலியுறுத்தி புதுதில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு நெல்லை நிர்வாகிகள் சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு நெல்லை திட்ட தலைவர் பீர்முகம்மது ஷா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சங்க பொரு ளாளர் நாகையன், நிர்வாகிகள் பாலசுப்பிர மணியன், சுடலைமணி கோவில்பட்டி பெரு மாள், தூத்துக்குடி யோவான், ராஜபாளை யம் சேர்வை, கோவில்பட்டி முருகன், ஸ்ரீவை குண்டம் பெருமாள் உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.