districts

img

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை தேனி மாவட்ட அமைப்பு கூட்டம்

தேனி, ஆக.6- தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் தேனி மாவட்ட அமைப்புக்குழு கூட்டம் தேனியில் நடைபெற்றது. தேனி தனியார் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அமைப்பின் மூத்த தலைவர் கே. ராஜப்பன் தலைமை வகித்தார் .அமைப்பின் மாநில  ஒருங்கிணைப்பாளர் க.உதயகுமார் அமைப்பின் நோக்கம் செயல்பாடுகள் குறித்து உரையாற்றினார் .நிகழ்ச்சியில் ஆர்.பிலிப்ஸ் சுதாகர் ,எஸ் யு எம் பள்ளி களின் தாளாளர் எம்.எஸ்.பிரபாகர்,தேனி மாவட்ட ஜாமாத்துல் உலமா சபை தலைவர் எம்.எம்.முகமது இஸ்மாயில் ,தேனி மாவட்ட ஊழியர் ஐக்கிய தலை வர் எம்.தீமோத்தேயு ,தேனி புதுப்பள்ளிவாசல் ஜமாத்  தலைவர் ஐ.சர்புதீன், தமிழ்நாடு கிறிஸ்தவ மக்கள் நல பேரமைப்பு தலைவர் சம்மட்டி நாகராஜன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். அமைப்புக் குழு கூட்டத்தில் 33 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு தேர்வு செய்யப்பட்டது . மாவட்ட ஒருங்கிணைப்பாளராக சி.முருகன் தேர்வு செய்யப் பட்டார்.