districts

img

12 மணி நேர வேலைக்கு எல்ஐசி ஊழியர்கள் எதிர்ப்பு

மதுரை, ஏப்.24- தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள 12 மணி நேர  வேலை மசோதவை திரும்பப்பெற வலியுறுத்தி அகில  இந்திய  இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் மதுரை யில் திங்களன்று மதுரை மண்டல அலுவலகம் உள்ளிட்ட  25 கிளைகளில் ஆரப்பாட்டம் நடைபெற்றது. செல்லூர் எல்ஐசி அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மதுரை கோட்டப் பொதுச் செயலாளர் என். பி. ரமேஷ்  கண்ணன்,  கோட்டத் தலைவர் ந.சுரேஷ் குமார், பொருளா ளர்  மகாலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  திண்டுக்கல் திண்டுக்கல் கிளை- 2-இல் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் காப்பீட்டு ஊழியர் சங்கத் தலைவர்  எஸ்.ஏ.டி.வாஞ்சி நாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.