பழனி, ஜூலை 18- பழனியை அடுத்துள்ள வட்டம் பெரி யம்மாபட்டியில் சுமார் 3000 ஏக்கருக்கு மேல் உபரி நிலங்கள் உள்ளன. இரு பது ஆண்டுகளுக்கும் மேலாக அனு பவத்தில் உள்ள சிறு குறு விவசாயி களுக்கு நிலம் வழங்க வேண்டும். நில ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற வேண்டும். ஆண்டிப்பட்டி சர்வே எண் 254-இல் வசிக்கும் விவசாயிகளுக்கு இடையூ றும் செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தும்பலப்பட்டியில் ஒப்படைப்பு வழங்கப்பட்ட விவசாயி களுக்கு பாதுகாப்பு வழங்கி விவசாயம் செய்ய உதவ வேண்டும். வடகவுஞ்சி கிராமத்தில் வெட்டுக்காட்டு விவசாயி களுக்கும் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி திங்களன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பழனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலப் பொதுச்செயலாளர் பெ. சண்முகம், மத்தியக் குழு உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் பி.செல்வராஜ், மாவட்டச் செயலாளர் என்.பெருமாள், ஒன்றியத் தலைவர்கள் எஸ். கிருஷ் ணன், பி.சின்னச்சாமி, கே.வேலுச்சாமி, கே.சின்னத்துரை, அகில இந்திய விவ சாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் கே.அருட்செல்வன், எஸ். கமலக்கண்ணன் எம்.ராமசாமி, என். கனகு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.