வாச்சாத்தி வழக்கின் வெற்றியை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வாடிப்பட்டி இடைக் கமிட்டி சார்பில் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளான மன்னாடிமங்களம், குருவித்துறை கிராமங்களில் நோட்டீஸ் விநியோகித்து பிரச்சாரம் நடைபெற்றது. இதில், மதுரை மாவட்டத் தலைவர் அ.வேல்பாண்டி, ஒன்றியச் செயலாளர் பிரபு, ஒன்றியத் தலைவர் ஏ.விவேக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.