districts

img

ஆடு, கோழி, மாடுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூல்: ஒட்டன்சத்திரம் நகராட்சி சந்தை ஒப்பந்தக்காரர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்க

திண்டுக்கல், செப்.30 ஒட்டன்சத்திரம் நகராட்சி சந்தையில் ஆடு, கோழி, மாடுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்தக்கார்கள் மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும் என்று தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.   திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் வெள்ளியன்று விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடைபெற்றது .  இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.பெருமாள் பேசுகையில், கடந்த கூட்டத்தில் ஒட்டன்சத்திரத்தில் உள்ள சந்தை குறித்து பேசினோம். ஆடு, மாடுக ளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள் என்று புகார் தெரிவித்தார்.  இதற்கு பதில் அளித்த அதிகாரிகள் ,நக ராட்சி மூலம் ஒப்பந்தகாரர்கள் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.  அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க  வேண்டும்  பெரி யம்மாபட்டி பிரச்சனையில் 3 ஆயிரம் ஏக்க ருக்கு மேல் உள்ளது. அந்த நிலத்தில் உரிய வர்களுக்கு பட்டா கொடுக்கப்பட்டுள்ளது. பல பிரச்சனை இருக்கிறது. ஆனாலும் அந்த ஏழை விவசாயிகளுக்கு நிலத்தை பகிர்ந்து கொடுப்பது சிறந்த நடவடிக்கையாகும். தைரி யமாக செயல்பட வேண்டும் என்று பெரு மாள்  கேட்டுக்கொண்டார். 

பஞ்சமர் நிலம் பஞ்சமருக்கே

தும்மலப்பட்டியில் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட நிலம் ஒப்படை செய்யப்பட்டுள் ளது. அதன் மீதும் தொடர் நடவடிக்கை வேண்டும். மேலும் அதே போல மண்ட வாடியில் தலித் மக்களுக்கு கொடுக்கப்பட்ட பஞ்சமர் நில பிரச்சனை. பஞ்சமர் நிலம் பஞ்ச மர்களுக்குத்தான். எனவே அந்த நிலத்தை மாற்றுப் பணிக்கு ஒதுக்கக்கூடாது. தலித் மக்களுக்கு பட்டாவாக வழங்க வேண்டும் என்று பெருமாள் கூறினார். உரத்தட்டுப்பாடு கம்பிளியம்பட்டியில் உரத்தட்டுப்பாடு நிலவுகிறது என்று பேசியவுடன் பதில் அளித்த அதிகாரிகள், இது தொடர்பாக தொடர் நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் உரத்தட்டுப்பாடு நீங்கிவிடும் என்றனர்.  கூட்டத்திற்கு வராத நகராட்சி ஆணையர்  முன்னாள் சத்திரப்பட்டி ஊராட்சி தலை வர் கருணாகரன் பேசும் போது, ஒட்டன்சத்தி ரம் மார்க்கெட்டில் அதிகமாக கட்டணம் வசூ லிப்பது தொடர்பாக கடந்த கூட்டத்தில் பேசி னோம். மனுக்கொடுத்தோம். ஆட்சியர் உத்தர விட்டும்  மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார். ஒட்டன்சத்திரம் நக ராட்சி ஆணையரை பதில் அளிக்க அழைத்தார். ஆனால் அவர் கூட்டத்திற்கே வரவில்லை என்ற வுடன் ஆட்சியருக்கு தர்ம சங்கடமாகியது. கையூட்டு பெறும் நிலஅளவைத்துறை விவசாயிகள் சங்கம் சார்பாக வெள்ளைக் கண்ணன் பேசும் போது,  நில அளவைத் துறையில் அரசாங்கத்திற்கு பணம் கட்டியும் கையூட்டு  கொடுப்பவர்களுக்கே அளவீடு செய்கிறார்கள். தொடர்ச்சியாக அதிகாரிகளி டம் வலியுறுத்தியும் அளவீடுக்கு  பணம் கட்டியும் அளவீடு செய்ய மறுக்கிறார்கள். பட்டா கொடுத்தும் கிராமக் கணக்கில் சேர்க்கா மல் கிடப்பில் போடப்படுகிறது என்று பேசி னார்.  பதில் அளித்த ஆட்சியர் விசாகன். நாங்கள் எந்த சர்டிபிகேட்டையும் பெண்டிங்கில் வைக்க வில்லை என்று சம்மந்தம் இல்லாமல் பேசி னார். பிறகு சுதாரித்துக்கொண்டு இது போன்ற புகாரை பொது இடத்தில் பேச வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் துணை ஆட்சி யர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.