திண்டுக்கல்லில் தமிழ்நாடு மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் 55வது ஸ்தாபக தினத்தையொட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்துடன் இணைந்து ரத்த தான முகாம் சனிக்கிழமையன்று நடைபெற்றது. முகாமிற்கு மதுக்குமார் தலைமை வகித்தார். வாலிபர் சங்க நிர்வாகிகள் சிலம்பரசன், பாலமுருகன், கணேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்டத் தலைவர் கே.பிரபாகரன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பாலாஜி, மருந்து பிரதிநிதிகள் சங்க தலைவர்கள் செந்தில்குமார், அமானுல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.