மதுரை, பிப்.1- ஒன்றிய அரசின் பட்ஜெட் தொழில், வணிகத்துறையினரின் எந்த எதிர்பார்ப்பையும் நிறை வேற்றாமல் ஏமாற்றிய பட்ஜெட் என்று தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கடுமையாக விமர்சித் துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் டாக்டர் என் .ஜெகதீசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: அடுத்த ஆண்டு நாடாளு மன்றத்திற்கு தேர்தல் வர உள்ள நிலையில் 2023-24 ஆம் ஆண்டிற் கான ஒன்றிய பட்ஜெட்டில் பல் வேறு சலுகைகள் மற்றும் அறிவிப்பு கள் இருக்கலாம் என்று அனைத்துத் தரப்பினராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த பட்ஜெட்டில் மிகச் சில சாதகமான அம்சங்கள் இருந் தாலும் தொழில், வணிகத் துறை யினரின் எவ்வித எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை என்பது ஏமாற் றம் அளிக்கிறது. நேரடி வரிகளைப் பொறுத்த வரை கடந்த 8 ஆண்டுகளாக வரு மான வரி விலக்கில் எவ்வித மாறுத லும் செய்யப்படாத சூழலில் வரு மான வரி விலக்கு வரம்பு ரூ.2.5 லட் சத்திலிருந்து 3 லட்சமாக உயர்த்தப் பட்டிருப்பதும், வருமான வரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து 7 லட்சமாக உயர்த்தி வரி தள்ளுபடி கொடுக் கப்பட்டிருப்பதும் போதுமானதாக இல்லை. மேலும் வருமான வரிப்பிரிவு சட்டம் 44 ஏ.பி-யில் தற்போதைய வரம்பு ரூ .1 கோடியிலிருந்து ரூ.2 கோடியாக உயர்த்தப்பட வேண் டும் என தொழில் வணிகத்துறை சார்பாக ஏற்கனவே வலியுறுத்தி யிருந்தும், இந்த வரி வரம்பு உயர்த் தப்படவில்லை. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்த வருமான வரி வசூலைக் காட்டிலும் 13 சதவீதம் கூடுதலாகவும், சுமார் 7 கோடி பேருக்கு மேல் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யப்பட்டி ருந்த நிலையிலும் இந்த பட்ஜெட் டில் வருமான வரியில் இன்னும் சலுகைகள் கொடுத்திருக்க வேண்டும்.
தென்தமிழக ஏற்றுமதி வெகுவாக பாதிக்கும்
விவசாயிகளுக்கான கடன் ரூ. 20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டிருப்பதும், புதிதாக இ- நீதி மன்றங்கள் (e-Court) துவங்கிட ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டி ருப்பதும், ஆன்லைன் பணப் பரி மாற்றத்திற்கு ரூ.9 லட்சம் வரை செய்து கொள்ளலாம் என்ற அறி விப்பும் வரவேற்கத்தக்கவை என் றாலும் ஜி.எஸ்.டி-யில் எந்த ஒரு நிவாரணமும் வழங்கப்படாத நிலையில் குறிப்பாக, கடந்த 2022 செப்டம்பர் வரை ஜி.எஸ்.டி வரி விலக்கு 5 ஆண்டுகளாக அளிக்கப் பட்டிருந்த விமான சரக்கு கட்ட ணத்தின் மீதும், கப்பல் சரக்குக் கட்டணத்தின் மீதும் முறையே 18 மற்றும் 5 சதவீதம் என கடந்த 2022 அக்டோபர் 1 முதல் அமல் படுத்தப்பட்டதை வரிவிலக்கு வரம்பை நீட்டிக்க வேண்டும் என தொழில் வணிகத்துறை சார்பாக வலியுறுத்தியிருந்தோம். இது குறித்த எவ்வித அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இல்லை. இதனால் அதிக அளவில் தென் தமிழகத்திலி ருந்து விமானம் மூலம் அனுப்பப் படும் அழுகும் பொருட்களான மலர்கள், காய்கறிகள், பழங்கள் ஏற்றுமதி வெகுவாக பாதிக்கும். நம் நாட்டில் 6 கோடியே 30 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கொரோனா காலக் கட்டத்திற்கு முன்பு இருந்த நிலை யில் தற்போது அதில் 14 சதவீத தொழிற்சாலைகள் அதாவது சுமார் 88 லட்சம் நிறுவனங்கள் இந்தியா முழுவதும் இன்று வரை மூடப்பட் டுள்ள நிலையில் அவற்றின் புனர மைப்பிற்காக இந்த பட்ஜெட்டில் ரூ.9300 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்திருப்பது வெறும் கண்துடைப் பாக மட்டுமே கருதப்படும்.
நாடு முழுவதும் 50 புதிய விமான நிலையங்கள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பில் தமிழகத்தில் புதி தாக அமையவிருக்கும் விமான நிலையங்கள் குறித்தும், நெடுஞ்சா லைத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள 2.70 லட்சம் கோடியில் தமிழகத்தின் 3 பஸ்போர்ட்டுகள் குறித்த அறிவிப் பும். 2.41 லட்சம் கோடி இரயில்வேத் துறைக்கு ஒதுக்கப்பட்டிருந்தாலும் மதுரை மற்றும் கோவையில் அமையவிருக்கும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு இதில் ஒதுக்கீடு செய் யப்பட்டிருக்கிறதா என்பது குறித் தும் நிதியமைச்சரின் பட்ஜெட் உரை யில் தெளிவாக இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. குறிப்பாக மதுரை விமான நிலைய மேம்பாட்டு பணிகளுக் கான நிதி ஒதுக்கீடு குறித்தும், ஏற்க னவே அறிவிக்கப்பட்டிருந்த எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒன்றிய அர சின் பங்கான ரூ 351 கோடி ஒதுக்கீடு குறித்தும், ரூ.1.76 லட்சம் கோடி கெமிக்கல்ஸ் மற்றும் உரங்கள் துறைக்கு ஒதுக்கப்பட்டிருந்த போதிலும் இத்துறையில் மதுரை யில் நைபர் நிறுவனத்திற்கு நிதி ஒதுக்கீடு குறித்து இந்த பட்ஜெட்டில் எவ்வித அறிவிப்பும் இல்லாததும் வருத்தம் அளிக்கிறது. மொத்தத்தில் இந்த நிதியாண் டிற்கான ஒன்றிய பட்ஜெட்டில் நடுத் தர பிரிவினர் (Middle Class), மற்றும் அவர்களுக்கு கீழ் உள்ள நடுத்தரப் பிரிவினருக்கு (Lower Middle Class) மட்டும் ஒரு சில சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் மத்திய தர பிரிவினருக்கும், தொழில் வணி கத் துறையினருக்கும் எவ்வித சலு கைகளும் இந்த பட்ஜெட்டில் இல்லை என்பது தான் உண்மை. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.